'இனிமேல் தான் மக்கள் ரொம்ப அலெர்ட்டா இருக்கணும்...' - சென்னையில் ஜெட் வேகத்தில் எகிறும் கொரோனோ...! பிற மாவட்டங்களிலும் கூடிக்கொண்டே வருகிறது... - முழு விவரம் உள்ளே!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இன்று (14-03-2021) ஒரே நாளில் 759 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மொத்தம் கொரோனா பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 8,59,726 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 4,870 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 294 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தமாக சென்னையில் மட்டும் சுமார் 2,38,820 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்தில் இன்றைய தினம் 547 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 8,42,309 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்புக் காரணமாக இன்று மொத்தம் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இதன்காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,547 ஆக உயர்ந்துள்ளது என குறிப்பிட்டுள்ளது.
தற்போது சென்னை உட்பட தமிழகமெங்கும் கொரோனா பரவல் அதிகமாக காணப்படுவதால் பொதுமக்கள் முன்னேசெரிக்கையாக மாஸ்க் அணிவது உள்ளிட்ட விசயங்களில் அலட்சியம் காட்டாமல் முறையாக பின்பற்ற வேண்டும்.

மற்ற செய்திகள்
