'தமிழகத்தின்' இன்றைய (05-02-2021) 'கொரோனா' நிலவரம்...! 'சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - முழு 'விவரம்' உள்ளே...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இன்று (05-02-2021) ஒரே நாளில் 489 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மொத்தம் கொரோனா பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 8,40,849 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 4,446 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 158 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையை அடுத்து கோயம்பத்தூரில் 54 பேருக்கும், செங்கல்பட்டில் 45 பேருக்கும் அதிகபட்சமாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பிரிட்டனில் இருந்து திரும்பியவர்களில் 20 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் தமிழகத்தில் இன்றைய தினம் 506 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 8,24,024 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்புக் காரணமாக இன்று மொத்தம் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இதன்காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,379 ஆக உயர்ந்துள்ளது.

மற்ற செய்திகள்
