'தமிழகத்தின் இன்றைய (21-11-2020) கொரோனா அப்டேட்'... 'சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்'... 'முழு விவரங்கள் உள்ளே!'...
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இன்று (21-11-2020) ஒரே நாளில் 1,663 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
![TN Chennai Covid-19 Updates And Statistics As On November 21 TN Chennai Covid-19 Updates And Statistics As On November 21](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/tn-chennai-covid-19-updates-and-statistics-as-on-november-21.jpg)
தமிழகத்தில் இன்று புதிதாக 1,663 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் மொத்தமாக பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 7,68,340 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 12,916 ஆக உள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 486 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,11,555 ஆக அதிகரித்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக அதிகப்பட்சமாக கோயம்பத்தூரில் 148 பேருக்கும், செங்கல்பட்டில் 116 பேருக்கும், திருவள்ளூரில் 114 பேருக்கும் கொரோனா உறுதியாகி உள்ளது.
மேலும் தமிழகத்தில் இன்றைய தினம் 2,133 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7,43,838 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையைப் பொறுத்தவரை இன்றைய தினம் அரசு மருத்துவமனையில் 11 பேர், தனியார் மருத்துவமனையில் 7 பேர் என மொத்தம் 18 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மொத்தமாக தற்போது வரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 11,586 ஆக உயர்ந்துள்ளது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)