'பயமுறுத்தும் எண்ணிக்கை'... 'தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவா?'...'சுகாதாரத்துறைச் செயலர் தகவல்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Mar 25, 2021 02:17 PM

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1636 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாகச் சென்னையில் 633 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Tamilnadu : Mini Lockdown will be implemented in corona affected areas

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று காரணமாகக் கடந்த வருடம் மார்ச் மாதத்தில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு, தற்போது வரை அமலில் உள்ளது. ஆரம்பத்தில் தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில், பின்னர் பொதுமக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்தது.

இதனால் வாழ்க்கை மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி வந்தது. கடந்த 2 மாதங்களாகத் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும் மிகக் குறைவாகவே இருந்தது. இந்நிலையில் நிலைமை எல்லாம் சரி ஆகி வருகிறது என நினைத்த நிலையில், தமிழகத்தில் கொரோனாவின் கொரோனாவின் தாக்கம் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டை போலத் தினசரி தொற்று எண்ணிக்கை 1000ஐ கடந்துள்ளது. இதனால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாகத் தகவல்கள் பரவியது.

இது தொடர்பாக சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார். அதில், ''தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட வாய்ப்பில்லை. அதற்கு மாற்றாகத் தொற்று பாதித்த பகுதிகளில் (தெரு, வீடுகள்) மட்டும் மினி ஊரடங்கு அமல்படுத்தத் திட்டமிடப்பட்டு உள்ளதாகத் தெரிவித்துள்ளார். முழு ஊரடங்கு தொடர்பாக வெளிவரும் அதிகாரப்பூர்வமற்ற தகவல்களை நம்ப வேண்டாம். 

மேலும் கொரோனா தொற்றைத் தடுக்க பொதுமக்கள் அனைவரும் முன்வந்து தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். தமிழக மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கைகள், வெண்டிலேட்டர்கள் மற்றும் சிகிச்சைக்குத் தேவையான அனைத்து வசதிகளும் தயார் நிலையில் உள்ளதாக'' அவர் கூறி உள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Tamilnadu : Mini Lockdown will be implemented in corona affected areas | Tamil Nadu News.