பிளஸ் டூ தேர்வில் மாற்றம்...! 'ஒரு தேர்வை இன்னொரு தேதிக்கு தள்ளி வைப்பு...' - தேர்வுத்துறை தகவல்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Apr 12, 2021 07:21 PM

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாக இருப்பதால் பிளஸ்- டூ தேர்வு ரத்து செய்யப்படும் அல்லது ஆன்லைனில் நடத்தப்படும் என்று மாணவர்களிடயே எதிர்பார்ப்பு நிலவியது.

tamil nadu government has been change language exam date

இந்த நிலையில் சற்று முன் இது குறித்த அறிவிப்பு ஒன்றை தமிழக தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.

பிளஸ்-டூ தேர்வில் மே 3-ம் தேதி நடைபெற இருந்த மொழிப்பாடம் மட்டும் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மே 3-ம் தேதிக்கு பதிலாக மே 31-ம் தேதி நடைபெறும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொழிப்பாடம் தவிர இதர பாடத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடக்கும் என்றும் சமூக இடைவெளியை பின்பற்றி அனைத்து தேர்வுகளும் நடக்கும் என்றும் தேர்வுத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மே 2-ம் தேதி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவருவதால் இந்த ஒரு தேர்வை மட்டும் மாற்றி வைத்திருக்கலாம் என கருத்தப்படுகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Tamil nadu government has been change language exam date | Tamil Nadu News.