‘என்ன பூட்டுன ஷட்டர் உடைஞ்சிருக்கு’!.. மிரண்டுபோன உரிமையாளர்.. காவலர் குடியிருப்பு அருகே நடந்த துணிகரம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Dec 23, 2020 06:03 PM

திருப்பத்தூரில் காவலர் குடியிருப்பு அருகே தனியார் சிகரெட் குடோனில் மர்ம நபர்கள் திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Robbery at cigarette warehouse near police quarters in Tirupattur

திருப்பத்தூரில் டாக்டர் சீனிவாசன் தெருவை சேர்ந்தவர் தொழிலதிபர் முரளி (40). இவர் ஈத்கா மைதானம் ரோட்டில் சிகரெட் நிறுவனம் நடத்தி வருகிறார். இதன் அருகே காவலர் குடியிருப்பு மற்றும் டிஎஸ்பி அலுவலகம் உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல கடையை பூட்டி விட்டு முரளி வீட்டுக்கு சென்றுள்ளார்.

இதனை அடுத்து நேற்று காலை ஊழியர்களுடன் கடையை திறக்க வந்தபோது, கடையின் பக்கவாட்டில் உள்ள ஷட்டர் உடைக்கப்பட்டு இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனே உள்ளே சென்று பார்த்தபோது, குடோனில் இருந்த சுமார் 25 பெட்டிகள் கொண்ட விலையுர்ந்த சிகரெட்டுகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதனை அடுத்து அவர் காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது கடையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் 4 பேர் கொண்ட மர்மகும்பல் ஷட்டரை உடைத்து சிகரெட்டுகள் இருந்த அட்டை பெட்டிகளை லாவகமாக எடுத்து காரில் ஏற்றும் காட்சி பதிவாகியுள்ளது தெரியவந்தது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். காவலர் குடியிருப்பு அருகே நடந்த இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Robbery at cigarette warehouse near police quarters in Tirupattur | Tamil Nadu News.