அடுத்த 24 மணிநேரத்தில் ‘மழை’.. வானிலை ஆய்வு மையம் ‘முக்கிய’ தகவல்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Dec 08, 2020 12:14 PM

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Rain expected next 24 hours in TamilNadu and Puducherry

இரு வேறு பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சிகள் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மன்னார் வளைகுடா பகுதியில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும், தென் கிழக்கு அரப்பிக்கடலை ஒட்டிய லட்சத்தீவு பகுதியில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் நிலவுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : #CLIMATE #RAIN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Rain expected next 24 hours in TamilNadu and Puducherry | Tamil Nadu News.