மருமகள் மரணத்துக்கு மாமியார் மீது குறியா..? பைக்கில் சென்ற நர்ஸுக்கு நேர்ந்த கொடூரம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Feb 21, 2022 11:15 PM

பெண் செவிலியர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Nurse murder near Karur, Police investigate

கரூர் மாவட்டம், லாலாபேட்டையை அடுத்த வயலூர் கிராமத்தை சேர்ந்தவர் மோகனசுந்தரம். இவரது மனைவி வளர்மதி (வயது 58). இவர் பாப்பக்காப்பட்டி கிராமத்தில் கிராம செவிலியராக பணியாற்றி வந்தார்.

நேற்று முன்தினம் பணியை முடித்து விட்டு தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். இரும்பூதிப்பட்டி அருகே சென்றபோது அவரை 5 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து இரும்பு கம்பியால் தலை மற்றும் பல பகுதிகளில் பலமாக தாக்கி விட்டு தப்பி சென்று விட்டனர். இதில் பலத்த காயமடைந்த வளர்மதியை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், வளர்மதியின் மருமகள் பிரீத்தி என்பவர் கடந்த ஆண்டு 8 மாத கர்ப்பிணியாக இருந்தபோது தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனால் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக கொலை நடந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கணக்கப்பிள்ளை என்ற ஊரை சேர்ந்த மாரிமுத்து, செல்லப்பாண்டி, புகழேந்தி, சரவணபுரத்தைச் சேர்ந்த மருதமுத்து, குட்டப்பட்டி தக்காளி என்கின்ற மனோகரன் ஆகிய 5 பேர் சேர்ந்து, வளர்மதியை கொலை செய்தது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இதனை அடுத்து தலைமறைவாக உள்ள அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். குடும்ப பிரச்சனையில் செவிலியர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #CRIME #MURDER #NURSE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Nurse murder near Karur, Police investigate | Tamil Nadu News.