"ஜல்லிகட்டு போட்டிகளை அனுமதிக்கக் கூடாது!".. மீண்டும் சர்ச்சையை கிளப்பும் பீட்டா அமைப்பு!.. தமிழக முதல்வருக்கு அவசர கடிதம்!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manishankar | Jan 07, 2021 08:11 PM

ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான அனுமதியை தமிழக அரசு திரும்ப பெற பீட்டா அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

jallikattu should not be allowed citing covid pandemic peta to cm eps

கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதி அளிக்கக் கூடாது என பீட்டா அமைப்பு தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

பீட்டாவின் இந்த நடவடிக்கைக்கு ஆதரவு அளிக்கும் வகையில், 50 மருத்துவர்கள் கையெழுத்திட்ட கடிதம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு, ஜல்லிக்கட்டு போட்டியை தடை செய்ய பீட்டா நிறுவனம் பல முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் அவை, இளைஞர்கள் முன்னெடுத்த போராட்டத்தால் முறியடிக்கப்பட்டது.

இந்நிலையில், போட்டிகளை நிறுத்தாவிட்டால் ஜல்லிக்கட்டால் மட்டுமின்றி கொரோனா காரணமாகவும் மக்கள் உயிரிழக்க வாய்ப்பு உள்ளது என பீட்டா அமைப்பு கூறியுள்ளது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Jallikattu should not be allowed citing covid pandemic peta to cm eps | Tamil Nadu News.