RRR Others USA

கோவை கோவில் திருவிழா.. மோதிக் கொண்ட இளைஞர்களை பிடித்து தலா 100 திருக்குறள் எழுத வைத்த போலீசார்

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Rahini Aathma Vendi M | Dec 28, 2021 10:46 AM

கோயில் திருவிழாவில் கலாட்டா செய்த இளைஞர்களைப் பிடித்து கோவை போலீஸார் வித்தியாசமான தண்டனை ஒன்றை கொடுத்துள்ளனர்.

coimbatore police gave thirukkural punishment to youngsters

கோயம்புத்தூர் மாவட்டம் மதுக்கரை பகுதியில் கோயில் திருவிழா ஒன்று நடைபெற்றுள்ளது. அப்போது இளைஞர்கள் சிலர் ஒருவருக்கு ஒருவர் மாறி மாறி திட்டிக்கொண்டு இருந்துள்ளனர். இது தொடர்ந்து கைகலப்பாக மாறி உள்ளது.

coimbatore police gave thirukkural punishment to youngsters

கைகலப்பில் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்ட இளைஞர்களை பின்னர் போலீஸார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மதுக்கரை போலீஸார் சண்டையிட்டுக் கொண்ட இளைஞர்களின் மன்னிப்பை முதலில் பெற்றுக் கொண்டனர். பின்னர் அவர்களுக்கு தண்டனையும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தண்டனை தான் தற்போது ஆச்சர்யத்தை அளித்துள்ளது.

coimbatore police gave thirukkural punishment to youngsters

மதுக்கரை போலீஸார் சண்டையில் ஈடுபட்ட சுமார் 10 இளைஞர்களையும் திருக்குறள் எழுதச் சொல்லி போலீஸார் தண்டனை கொடுத்துள்ளனர். அதுவும் ஒன்று, இரண்டு அல்ல 100 திருக்குறள்களை எழுதச் சொல்லி தண்டனை கொடுத்துள்ளனர் மதுக்கரை போலீஸார். திருக்குறளும் திருவள்ளுவரும் சமீப காலத்தில் மிகவும் பிரபலமடைந்து வரும் பெயர்களாக உள்ளது.

coimbatore police gave thirukkural punishment to youngsters

இந்த சூழலில் 100 திருக்குறள்களையும் கைகளால் பேனா பேப்பர் கொடுத்து எழுத வைத்துள்ளனர் போலீஸார். பல இடங்களில் ட்ராபிக் போலீஸார் விதிமீறும் இளைஞர்களை 10 திருக்குறள்கள் அல்லது 20 திருக்குறள்களை எழுத வைத்துள்ள சம்பவங்களும் இதற்கு முன்னர் தமிழ்நாட்டில் ஆங்காங்கே நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : #POLICE #COIMBATORE POLICE #THIRUKKURAL #திருக்குறள் #கோவை போலீஸார் #திருக்குறள் தண்டனை

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Coimbatore police gave thirukkural punishment to youngsters | Tamil Nadu News.