"நம்ம முதலாளி வீட்டு விஷேசத்துல நம்ம பண்ணாம".. சீர்வரிசையுடன் என்ட்ரி கொடுத்த வடமாநில தொழிலாளர்கள்.. நெகிழ்ச்சி சம்பவம்!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Ajith Kumar V | Mar 12, 2023 10:53 PM

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வடமாநில தொழிலாளர்கள் குறித்து நிறைய செய்திகள் பெரிய அளவில் பேசு பொருளாகி பரபரப்பையும் ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பாக, போலீஸ் அதிகாரிகள் தரப்பில் சில அறிக்கைகளும் வெளியாகி இருந்தது.

Chennai migrant workers attend function in tamil culture

                                                              Images are subject to © copyright to their respective owners

தமிழ்நாட்டின் பல இடங்களில், இன்று ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தங்களின் முதலாளி ஒருவரது வீட்டு விசேஷத்திற்காக வடமாநில தொழிலாளர்கள் சேர்ந்து செய்த விஷயம் ஒன்று பெரிய அளவில் பலரையும் மனம் நெகிழ வைத்துள்ளது.

முதலாளி வீட்டு விசேஷம்

சென்னை பூந்தமல்லி பகுதியை அடுத்த செம்பரம்பாக்கம் என்னும் இடத்தை சேர்ந்தவர் ராஜாமணி. இவரது மனைவி பெயர் பத்மாவதி. கட்டுமான நிறுவன உரிமையாளராக இருந்து வரும் ராஜாமணியிடம் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருவதாக தகவல்கள் கூறுகின்றது. அது மட்டுமல்லாமல், அவர்கள் மீது ராஜாமணிக்கு அதிக அன்பும், அக்கறையும் உள்ளதுடன் அவர்களை சிறந்த முறையில் கவனித்தும் வந்துள்ளார்.

Chennai migrant workers attend function in tamil culture

Images are subject to © copyright to their respective owners

இதனிடையே, சமீபத்தில் ராஜாமணியின் மகள் விஷ்ணு பிரியாவிற்கு பூப்புனித நீராட்டு விழா, பூந்தமல்லி அருகே அமைந்துள்ள தனியார் மண்டபம் ஒன்றில் நடந்துள்ளது. மேலும், இந்த நிகழ்ச்சிக்கு தன்னிடம் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார் ராஜாமணி.

அசத்திய வடமாநில தொழிலாளர்கள்

இந்த நிலையில் தங்களின் முதலாளியின் அழைப்பை ஏற்று சுமார் 50 க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் இந்த பூப்புனித நீராட்டு விழாவில் கலந்து கொண்டுள்ளனர். வெறுமென விருந்தினர்களாக அந்த நிகழ்ச்சிக்கு செல்லாமல் சீர்வரிசை தட்டுகளுடன் அவர்கள் கலந்து கொண்டது தான் தற்போது இணையத்தில் பேசு பொருளாக மாறி உள்ளது.

அர்ச்சதை தூவி நலங்கு

பல தொழிலாளர்களும் கையில் தட்டுடன் அதில் பல்வேறு பொருட்களை வைத்து மேடை ஏறி இருந்த நிகழ்வு அங்கிருந்த அனைவரையும் அதிகம் ஆச்சரியப்பட வைத்திருந்தது. இதனைத் தொடர்ந்து உறவினர்கள் செய்யும் அனைத்து சடங்குகளையும் அவர்கள் செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றது. அதன்படி பெண்ணிற்கு அர்ச்சதை தூவி நலங்கு வைத்து ஆசீர்வாதமும் செய்துள்ளனர் வடமாநில தொழிலாளர்கள்.

Chennai migrant workers attend function in tamil culture

Images are subject to © copyright to their respective owners

தமிழ்நாட்டில் உள்ள முதலாளி வீட்டு விசேஷ நிகழ்ச்சியில் வடமாநில தொழிலாளர்கள் சீர் தட்டுடன் கலந்து கொண்டு சீர்வரிசை செய்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அதிகம் லைக்குகளையும் அள்ளி வருகிறது.

Tags : #LABOURERS #NORTH INDIA

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Chennai migrant workers attend function in tamil culture | Tamil Nadu News.