‘சிறுமியைக் கடித்து குதறிய ராட்வீலர் நாய்..’ காப்பாற்றப் போனவர்களையும் கடித்த பரிதாபம்..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Jun 05, 2019 05:53 PM

சென்னையை அடுத்த மாங்காட்டில் சாலையில் நடந்து போய்க்கொண்டிருந்த சிறுமி உட்பட 3 பேரை வளர்ப்பு நாய் ஒன்று கடித்துக் குதறியுள்ளது.

12 year old girl attacked by rottweiler dog in chennai

மாங்காடு ஸ்ரீராமஜெயம் தெருவில் வசிக்கும் சுகந்த் என்பவர் ராட்வீலர் எனும் வெளிநாட்டு ரக நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். இவர் வீட்டின் கதவைத் திறந்து வெளியே வந்தபோது அந்த நாய் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்துள்ளது.

அப்போது கடைக்கு செல்வதற்காக சாலையில் சென்று கொண்டிருந்த கீர்த்தனா என்ற 12 வயது சிறுமியை அந்த நாய் துரத்தியுள்ளது. சிறுமியைத் துரத்திச் சென்று அவரைக் கடித்துக் குதறியுள்ளது. அப்போது சிறுமியை மீட்க வந்த இரண்டு பேருக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளது. இதில் படுகாயமடைந்த சிறுமியை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags : #ROTTWEILER #DOG