‘கவனமாக இருங்க’!.. ‘நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன்’.. சச்சின் டெண்டுல்கர் திடீர் அறிவிப்பு..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Apr 02, 2021 02:42 PM

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Sachin Tendulkar hospitalised as precautionary measure

நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 81,466 பேருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இது கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகமான பாதிப்பு என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் பல்வேறு பிரபலங்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

Sachin Tendulkar hospitalised as precautionary measure

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், தான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கடந்த மார்ச் மாதம் 27-ம் தேதி தெரிவித்திருந்தார். இதனை அடுத்து வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாகவும், மருத்துவர்களின் ஆலோசனைகளை பின்பற்றி வருவதாகவும் கூறியிருந்தார்.

இந்தநிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக சச்சின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,‘உங்களது பிரார்த்தனை மற்றும் வாழ்த்துகளுக்கு நன்றி. மருத்துவ ஆலோசனையின்படி, கூடுதல் முன்னெச்சரிக்கையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். அடுத்த சில நாட்களில் நான் வீடு திரும்புவேன் என நம்புகிறேன். ஒவ்வொருவரும் பாதுகாப்பாகவும், கவனமாகவும் இருங்கள்’ என சச்சின் டெண்டுல்கர் பதிவிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Sachin Tendulkar hospitalised as precautionary measure | Sports News.