"அன்றே கணித்தார் 'ரோஹித்' ஷர்மா..." இப்போ நடக்குறத பத்தி '2011'-லேயே சொல்லிட்டாரு..." வேற லெவலில் வைரலாகும் 'ட்வீட்'!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Ajith | Oct 29, 2020 11:13 AM

பெங்களூர் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் மும்பை அணி வீரர் சூர்யகுமார் யாதவ் சிறப்பாக ஆடி அணியை வெற்றி பெறச் செய்தார்.

rohit sharma tweet about suryakumar in 2011 gone viral

முன்னதாக, ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில், சூர்யகுமார் யாதவிற்கு இடம் கிடைக்கும் என நினைத்திருந்த நிலையில், அவரது பெயர் இல்லாமல் போனது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து, ஐபிஎல் தொடர்களில் மிகச் சிறப்பாக சூர்யகுமார் ஆடி வரும் நிலையில், அவர் இதுவரை ஒரு முறை கூட சர்வதேச அணிக்காக ஆடியதில்லை.

இந்த முறையும் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. அவருக்கு ஏன் அணியில் இடம் கிடைக்கவில்லை என பல முன்னாள் வீரர்கள் பிசிசிஐ-க்கு கேள்வி எழுப்பியிருந்த நிலையில், நேற்றைய போட்டியில் அவரது திறமையான பேட்டிங் இந்திய அணி தேர்வுக் குழு மீது மேலும் கேள்வியை உருவாக்கியுள்ளது. rohit sharma tweet about suryakumar in 2011 gone viral

இந்நிலையில், சூர்யகுமாரின் சிறப்பான ஆட்டத்திற்கு பிறகு ரோஹித் ஷர்மாவின் பழைய ட்வீட் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. 2011 ஆம் ஆண்டில் ரோஹித் ஷர்மா தனது ட்வீட் ஒன்றில், 'வருங்காலத்தில் சூர்யகுமார் யாதவ் கவனிக்கப்படும் திறமையான வீரராக இருப்பார்' என குறிப்பிட்டுள்ளார். 

சச்சின் அணியில் இருந்த சமயத்தில், ரோஹித்திற்கு கூட அணியில் நிரந்தர இடமில்லாத அத்தகைய சமயத்தில் ஒரு இளம் வீரர் குறித்து ரோஹித் ஷர்மா சரியாக கணித்துக் கொண்டது தற்போது வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Rohit sharma tweet about suryakumar in 2011 gone viral | Sports News.