மனைவிகளுடன் இந்தியாவுக்கு விளையாட வந்த பாகிஸ்தான் வீரர்கள்.. 10 வருசத்துக்கு முன்னாடி என்ன நடந்தது..? பரபரப்பை கிளப்பிய முன்னாள் தலைவர்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணி குறித்து முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் கூறிய தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
![Pak players wives were sent on 2012 tour of India: Zaka Ashraf Pak players wives were sent on 2012 tour of India: Zaka Ashraf](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/sports/pak-players-wives-were-sent-on-2012-tour-of-india-zaka-ashraf.jpg)
இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நிலவும் அரசியல் பிரச்சினை காரணமாக இருநாடுகளுக்கு இடையேயும் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுவதில்லை. ஐசிசி நடத்தும் உலகக்கோப்பை போன்ற தொடர்களில் மட்டுமே இருநாடுகளும் மோதுகின்றன.
மேலும் இந்தியாவுக்கு பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொள்வதும், பாகிஸ்தானுக்கு இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொள்வதும் பல ஆண்டுகளாக நடைபெறாமல் உள்ளது. கடைசியாக கடந்த 2012-ம் ஆண்டு இந்தியாவுக்கு பாகிஸ்தான் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அதில் 2 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் விளையாடின.
டி20 தொடரில் இரு அணிகளும் சம பலத்துடன் விளையாடியதால், 1-1 என்ற கணக்கில் தொடர் சமனில் முடிந்தது. இதனை அடுத்து நடந்த ஒருநாள் தொடரில் அதிரடியாக விளையாடிய பாகிஸ்தான் அணி 2-1 என்ற கணக்கில் இந்தியாவை சொந்த மண்ணில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.
இந்த நிலையில், அப்போது நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின்போது அழகான பெண்களை வைத்து பாகிஸ்தான் வீரர்களை மயக்கி தோல்வி பெற வைக்க இந்தியா நினைத்ததாக, அப்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவராக இருந்த ஜாகா அஷ்ரப் பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், ‘என்னுடைய காலத்தில் இந்தியாவிற்கு சென்றபோது, பாகிஸ்தான் அணியில் இருந்த வீரர்கள் தங்களது மனைவிகளை உடன் அழைத்து செல்லுமாறு ஆலோசனை கொடுத்தேன். ஏனென்றால் இந்திய ஊடகங்கள் அதுபோன்ற சம்பவங்கள் நடந்து விடுமா என எதிர்பார்த்து இருந்தன. அதை தவிர்க்கும் வகையில் இந்த முடிவை எடுத்தோம். ஒவ்வொரு வீரர்களையும் அவர்களது மனைவிமார்கள் கண்காணித்து கொள்ளுமாறு நாங்கள் அறிவுறுத்தினோம்.
அதை தவறாக எடுத்துக் கொள்ளாத வீரர்களும் தங்களது மனைவிகளுடன் இந்தியாவிற்கு சென்று கட்டுக்கோப்புடன் நடந்து கொண்டனர். ஒவ்வொரு முறையும் நாங்கள் இந்தியாவுக்குச் செல்லும் போதெல்லாம் அவர்கள் எங்களை வலையில் விழ வைக்க முயற்சித்தனர். மேலும் எங்களது வீரர்களுக்கும், நாட்டிற்கும் களங்கத்தை ஏற்படுத்த நினைத்தனர். ஆனால் நாங்கள் அதை தவிர்த்து விட்டோம்’ என ஜாகா அஷ்ரப் கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணி மீது இவர் வைத்த குற்றச்சாட்டு தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read | அம்மாடியோவ்..! என்னா அடி.. ‘ரெண்டாக உடைந்த ஸ்டம்ப்’.. RR-ஐ மிரள வைத்த பாண்ட்யா..!
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)