'அடுத்த கேப்டன் யார்னு... கோலியே அறிவிக்கப் போறாரு'!.. பீதியை கிளப்பிய முன்னாள் வீரர்!.. மீண்டும் தொடங்கியது சர்ச்சை!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manishankar | May 27, 2021 11:29 PM

இந்திய அணியின் அடுத்த கேப்டனாகும் வாய்ப்பு யாருக்கு கிடைக்கும் என்பதற்கு முன்னாள் வீரர் கிரண் மோரே கருத்து தெரிவித்துள்ளார்.

kiran more predicts kohli to share captaincy rohit

இந்திய கிரிக்கெட்டில், டி20, ஒருநாள், டெஸ்ட் என மூன்று வடிவ கிரிக்கெட்டுக்கும் கேப்டனாக இருப்பவர் விராட் கோலி. எனினும், இவரது ஆட்டத்திறன் எந்தவிதத்திலும் பாதிக்கப்படவில்லை. பிரஷர் அதிகமாக இருந்தாலும், தனது ரன் வேட்டையில் எந்தவித சுணக்கமும் இல்லாமல் பார்த்துக் கொள்கிறார்.

எனினும், டி20, டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது கேப்டன்ஷிப் குறித்து அவ்வப்போது சில சலசலப்புகள் எழுந்து போனதை வரலாறு அறியும். இந்த நிலையில், இந்திய கிரிக்கெட்டின் வெவ்வேறு வடிவங்களுக்கு, வெவ்வேறு கேப்டன்கள் விரைவில் நியமிக்கப்படலாம் என்று இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழு முன்னாள் தலைவரும், முன்னாள் இந்திய விக்கெட் கீப்பருமான கிரண் மோரே கூறியுள்ளார்.

இவரது இந்த கருத்து ரசிகர்கள் மத்தியில் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.  இதுகுறித்து அவர் இந்தியா டிவிக்கு அளித்த பேட்டியில், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயல்பாடுகள் ஒவ்வொரு வடிவத்துக்கும் ஒவ்வொரு கேப்டன் என்ற அணுகுமுறையை நோக்கி நகர்வதாக நான் நினைக்கிறேன். இதனால், ரோஹித் ஷர்மாவுக்கு விரைவில் வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன்.

விராட் கோலி, முன்னாள் கேப்டன் தோனி தலைமையில் விளையாடிய ஒரு புத்திசாலி வீரர். கோலி, ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளுக்கு இன்னும் எவ்வளவு காலம் கேப்டனாக இருக்க வேண்டும் என்பது குறித்து கோலியும் சிந்திப்பார். இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்குப் பிறகு இந்த முடிவுகளைப் பற்றி நீங்கள் அதிகம் விவாதிப்பீர்கள் என்று கூறியுள்ளார். 

இங்கிலாந்து அணியில் ஜோ ரூட் மற்றும் இயன் மோர்கன் கேப்டன்களாக உள்ளனர். ஆஸ்திரேலியாவில், டிம் பெய்ன் மற்றும் ஆரோன் ஃபின்ச் கேப்டன்களாக செயல்படுகின்றனர். இதேபோன்ற அணுகுமுறை இந்தியாவில் ஒர்க் அவுட் ஆகும் என்கிறார் கிரண் மோரே. 

இதுகுறித்து அவர் பேசியபோது, இந்தியாவில் இந்த அணுகுமுறை எடுபடும். இந்திய அணியின் எதிர்காலம் குறித்து சீனியர் வீரர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது மிகவும் முக்கியமானது. விராட் கோலி, மூன்று வடிவ இந்திய அணிக்கும் கேப்டனாக இருப்பதோடு மட்டுமல்லாமல், அவர் சிறப்பாகவும் விளையாட வேண்டும். அது அவ்வளவு எளிதானது அல்ல.

எனினும், கேப்டனாகவும், தனி வீரராகவும் அவர் வெற்றி பெறுவதை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், விராட் கோலி ஒரு நாள், இது போதும், ரோஹித் அணியை வழிநடத்தட்டும் என்று சொல்லும் ஒரு காலம் வரும் என்று நான் நினைக்கிறேன் என்று மோரே கூறியிருக்கிறார். 

டெஸ்ட் கிரிக்கெட்டில், அஜின்க்யா ரஹானே துணை கேப்டனாக இருக்க, ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ரோஹித் துணை கேப்டனாக செயல்படுகிறார். குறிப்பாக, இந்த ஆண்டு தொடக்கத்தில் ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில், முதல் போட்டியில் விராட் கோலி தலைமையில் இந்தியா மெகா தோல்வி அடைய, ரஹானே தலைமையிலான இந்திய அணி 2-1 என்று கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்தது.

அதுமட்டுமின்றி, ரோஹித்தும், டி20 போட்டிகளில் தலைசிறந்த கேப்டனாக செயல்படுகிறார். அவரது தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறை ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Kiran more predicts kohli to share captaincy rohit | Sports News.