எல்லாரும் ஜடேஜா பண்ணுனத பாத்தீங்க.. ஆனா பின்னாடி வந்த ‘ராயுடு’ என்ன பண்ணார்னு நோட் பண்ணீங்களா..? அதான் இப்ப ‘செம’ வைரல்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Apr 22, 2022 09:26 AM

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றபின் சிஎஸ்கே அணியின் விக்கெட் கீப்பர் தோனிக்கு அம்பட்டி ராயுடு மரியாதை கொடுத்தது இணையத்தில் வைரலாகி வருகிறது.

CSK Rayudu special thanks to Dhoni after incredible knock against MI

ஐபிஎல் தொடரின் நேற்றைய 33-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக திலக் வர்மா 51 ரன்கள் எடுத்தார்.

இதனை அடுத்து 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சிஎஸ்கே அணி பேட்டிங் செய்தது. ஆனால் ஆரம்பமே அதிர்ச்சியாக தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே அவுட்டாகி வெளியேறினார். இதனை அடுத்து மிட்சல் சாண்ட்னர் 11 ரன்களிலும், ராபின் உத்தப்பா 30 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இந்த சமயத்தில் களமிறங்கி நிதானமாக ஆடிய அம்பட்டி ராயுடு 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் ஜடேஜா 3 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

CSK Rayudu special thanks to Dhoni after incredible knock against MI

அதனால் 139 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. அப்போது ஜோடி சேர்ந்த தோனி மற்றும் டுவைன் பிரிட்டோரியஸ் கூட்டணி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் கடைசி 1 பந்தில் 4 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் சிஎஸ்கே அணி இருந்தது. அப்போது களத்தில் இருந்த தோனி, பவுண்டரி விளாசி அணியை வெற்றிபெற வைத்தார்.

இதனை அடுத்து போட்டி முடிந்து வீரர்கள் பெவிலியன் திரும்பிய போது, சிஎஸ்கே அணியின் கேப்டன் ஜடேஜா தோனியை பார்த்து தலைகுனிந்து மரியாதை செலுத்தினார். அப்போது அவருக்கு பின்னால் வந்த அம்பட்டி ராயுடு கையெடுத்து கும்பிட்டு தோனிக்கு மரியாதை செலுத்தினார்.

அணி இக்கட்டான நிலையில் இருந்தபோதும், முகத்தில் எந்தவித பதட்டத்தையும் காட்டாமல் பொறுமையாக விளையாடி தோனி அணியை வெற்றிபெற வைத்தார். இதனை ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://www.behindwoods.com/bgm8/

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. CSK Rayudu special thanks to Dhoni after incredible knock against MI | Sports News.