BGM Shortfilms 2019

'அசால்ட் காட்டிய இந்திய வீரர்'... ‘மிரண்டுப்போன வெஸ்ட் இண்டீஸ் வீரர்‘... வைரலான வீடியோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Sangeetha | Aug 12, 2019 06:27 PM

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியில், இந்திய அணி வீரர் புவனேஸ்வர் குமார் பிடித்த அசத்தல் கேட்ச் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. 

Bhuvneshwar Kumar turns match with stunning catch

மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் மேற்கிந்திய தீவுகள் அணியை ஒயிட் வாஷ் செய்து தொடரை கைப்பற்றியது. இதனையடுத்து வந்த ஒரு நாள் தொடரின் முதல் போட்டி மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டது. 2-வது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா அணி முதலில் பேட்டிங் செய்தது. கேப்டன் விராட் கோலியின் அபார சதத்தால் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 279 ரன்கள் எடுத்தது. கேப்டன் விராட் கோலி 120 ரன்களும், ஷ்ரேயாஸ் ஐயர் 71 ரன்கள் எடுத்தனர். 

அதையடுத்து களமிறங்கிய மேற்கிந்தி தீவுகள் அணி விளையாடி கொண்டிருக்கும் போது போட்டியின் 12.5-வது ஓவரில் மழை குறுக்கிட்டதால் போட்டி நிறுத்தப்பட்டது. பின் போட்டி 46 ஓவர்களாக குறைக்கப்பட்டு டக்வர்த் லூயிஸ் முறைப்படி 270 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயக்கப்பட்டது. மேற்கிந்திய தீவுகள் அணி 42 ஓவர்களில் அனைத்து விக்கெட்டைகளையும் இழந்து 210 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி டக்வர்த் லூயிஸ் முறைப்படி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் போட்டியின்போது புவனேஸ்வர் குமார், 35-வது ஓவரை வீசும் போது ராஷ்டன் சேஸ் பேட்டிங் செய்து கொண்டிருந்தார். புவனேஸ்வர் குமார் வீசிய பந்தை ராஷ்டன் சேஸ் ரன் எடுக்க முயன்றார். அப்போது பேட்டின் விளிம்பில் பட்ட பந்தை, புவனேஸ்வர் குமார் பாய்ந்து ஒருகையில் கேட்ச் பிடித்தார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Tags : #BHUNESHWARKUMAR #INDIA #WESTINDIES