"அப்டியே 'றெக்க' கெட்டி பறக்குற மாதிரி இருக்கு..." இது எல்லாத்துக்கும் 'காரணம்' சென்னை மக்கள் தான்... 'அஸ்வின்' உருக்கம்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Ajith | Feb 17, 2021 11:54 AM

சென்னை சேப்பாக்கத்தில் நடந்து முடிந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணியை வீழ்த்தி, இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருந்தது.

ashwin gets overhelmed by chennai fans support

இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல், இங்கிலாந்து அணி இரண்டு இன்னிங்ஸ்களிலும் கடுமையாக திணறியது. அதிலும் குறிப்பாக, இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின் மற்றும் அக்சர் படேல் ஆகியோர் அதிக நெருக்கடியை இங்கிலாந்து அணிக்கு ஏற்படுத்தினர். அஸ்வின் மொத்தமாக 8 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில், பேட்டிங்கிலும் அசத்தலாக ஆடி சதமடித்தார்.

 

மொத்தமாக, ஆல் ரவுண்டர் பெர்ஃபார்மன்ஸ் காட்டி, அணியின் வெற்றிக்கு உதவியாக இருந்த அஸ்வினுக்கு ஆட்ட நாயகன் விருது கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, இந்த போட்டி குறித்து ட்விட்டரில் பதிவிட்ட அஸ்வின், 'தற்போது எப்படி உணர்கிறேன் என்பதை என்னால் வெளிப்படுத்த முடியவில்லை. ஆனால், கடந்த சில நாட்களாக என்னை வாழ்த்திய அனைவருக்கும் நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். மேலும், என்னை ஒரு ஹீரோ போல உணர வைத்த சென்னை ரசிகர்களுக்கும் நன்றி' என மிகவும் நெகிழ்ச்சியுடன் தனது கருத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Ashwin gets overhelmed by chennai fans support | Sports News.