"வீட்ட 'க்ளீன்' பண்றப்போ... இப்டியா 'CARELESS'அ இருக்குறது??..." குப்பையில் விழுந்த தங்க 'நகை'... அடுத்தடுத்து நடந்த 'ட்விஸ்ட்'!!!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith | Nov 14, 2020 09:49 PM

புனேவின் பிம்பிள் சவுதாகர் (Pimple-Saudagar) என்னும் பகுதியை சேர்ந்தவர் ரேகா செலுக்கர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அவர் தனது வீட்டினை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

pune woman throws bag containing rs 3 lakh jewellery

இதனால் தனது வீட்டில் இருந்த தேவையில்லாத பொருட்கள் அனைத்தையும் அவர் நீக்கி அவற்றினை சில பைகளில் அடைத்து குப்பைத் தொட்டியில் போட்டுள்ளார். இந்நிலையில், சுமார் 2 மணி நேரத்திற்கு பிறகு தான் அந்த குப்பையில் சுமார் 3 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் இருந்ததை அறிந்து ரேகா அதிர்ச்சியடைந்தார்.

பல நாட்கள் சேமித்த பணத்தின் மூலம் வாங்கிய நகைகளை மீட்டெடுக்க வேண்டி உடனடியாக நடவடிக்கைகளை ரேகா மேற்கொண்டார். இது தொடர்பாக, அப்பகுதியில் பணிபுரிவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அப்பகுதியிலுள்ள குப்பை தொட்டிகளில் தேடிய நிலையில் அங்கிருந்து சேகரிக்கப்பட்ட குப்பைகள் அனைத்தும் வேறு பகுதிக்கு மாற்றப்பட்டது ரேகாவின் குடும்பத்தினருக்கு தெரிந்தது.

தொடர்ந்து அங்கு சென்று குப்பைகளில் தேடிய நிலையில், அதில் அவர்களின் பை இருப்பது கண்டறியப்பட்டது. சுமார் 40 நிமிடங்களுக்கு பின்னர், ரேகாவின் நகைகள் திரும்பக் கிடைத்த நிலையில், இன்னும் சற்று தாமதமாகி இருந்தால் அவையனைத்தும் பெரிய குப்பை  கிடங்கு பகுதியில்  கொட்டப்பட்டு அந்த குவியலில் தேடுவதே கடினமாக இருந்திருக்கும் என சிலர் தெரிவித்துள்ளனர்.

நகைகள் திரும்பக் கிடைத்ததால் ரேகா மற்றும் குடும்பத்தினர் நிம்மதி பெருமூச்சு விட்டனர். முதலில் கை விட்டு போன விலை மதிப்புள்ள பொருள் ஒன்று, அற்புதம் நிகழ்ந்தது போல மீண்டும் உரியவர்கள் கைக்கே வந்து சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : #DIWALI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Pune woman throws bag containing rs 3 lakh jewellery | India News.