என்ன சூட்கேஸ் வெயிட்டா இருக்கு?.. அதிகாரிகளுக்கு வந்த டவுட்.. அடுத்த நிமிடமே ஷாக்.. வீடியோ

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Madhavan P | Feb 23, 2023 05:58 PM

மும்பை விமான நிலையத்தில் வெளிநாட்டு பணத்தை கடத்த நினைத்த நபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்திருக்கின்றனர். இந்நிலையில், அவருடைய சூட்கேஸிலிருந்து கட்டுக்கட்டாக பணம் வெளியே எடுக்கப்படும் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

Mumbai Airport Officials Seize RS 8 crore from passenger Video

                        Images are subject to © copyright to their respective owners.

Also Read | இந்தா கிளம்பிட்டாங்க.. ஊருக்கு திரும்பிய அடுத்த ஆஸ்திரேலிய வீரர்.. முழு விபரம்.!

சமீப காலமாக வெளிநாடுகளில் இருந்து தங்கம், போதை பொருட்கள், வெளிநாட்டு பணம் உள்ளிட்டவற்றை கடத்திவரும் நபர்களை விமான நிலைய அதிகாரிகள் கைது செய்வது வாடிக்கையாகிவிட்டது. அதேபோல, இந்தியாவில் இருந்து வெளிநாட்டு பணம் மற்றும் விலையுயர்ந்த பொருட்களுடன் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயற்சிக்கும் கடத்தல் நபர்களும் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இப்படி கைதானவர்கள் கடத்தலுக்கு உபயோகிக்கும் வழிமுறைகள் மிகவும் வித்தியாசமானவையாக இருக்கும்.

Mumbai Airport Officials Seize RS 8 crore from passenger Video

Images are subject to © copyright to their respective owners.

அந்த வகையில் மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்க வாழ் இந்திய நபரை அதிகாரிகள் கைது செய்திருக்கின்றனர். விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய பரிசோதனையின்போது ஒரு பயணி சந்தேகத்திற்கிடமாக நடந்து கொண்டதால் அவரை தனியாக அழைத்துச் சென்று பரிசோதனை செய்திருக்கின்றனர். அப்போது, CSIF மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்திய போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் சந்தேகமடைந்திருக்கின்றனர்.

Mumbai Airport Officials Seize RS 8 crore from passenger Video

Images are subject to © copyright to their respective owners.

இதையடுத்து அவருடைய உடமைகள் பரிசோதனை செய்யப்பட்டன. அப்போது அவர் கொண்டுவந்திருந்த சூட்கேசில் கட்டுக்கட்டாக அமெரிக்க டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. அதில் 10 லட்சம் டாலர்கள் இருந்ததாகவும் அதன் மதிப்பு சுமார் 8.3 கோடி ரூபாய் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Mumbai Airport Officials Seize RS 8 crore from passenger Video

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில், சூட்கேசில் இருந்து கத்தை கத்தையாக பணத்தை அதிகாரிகள் வெளியே எடுக்கும் வீடியோவை சுங்கத்துறை அதிகாரிகள் தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Also Read | முடிவுக்கு வந்த காத்திருப்பு.. இனி இவரு தான் கேப்டன்.. சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி அறிவிப்பு..!

Tags : #MUMBAI #MUMBAI AIRPORT #PASSENGER #SEIZE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Mumbai Airport Officials Seize RS 8 crore from passenger Video | India News.