சொன்ன 'பேச்சு' கேட்க மாட்டிங்களா?... 'செங்கல்லால்' கொடூரமாக தாக்கிய தந்தை... சிறுமிகளுக்கு நேர்ந்த 'பரிதாப' முடிவு!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith | May 26, 2020 05:53 PM

உத்தரப்பிரதேச மாநிலம் சாண்ட் கபீர் நகர் என்னும் பகுதியில் தந்தை ஒருவர் தனது இரண்டு மகள்களை செங்கல் கொண்டே அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Man kills his two daughters brutally attacking with brick

அம்மாநிலத்தில் உள்ள கிராமம் ஒன்றை சேர்ந்த ஜைனுல் அப்தீன் என்பவருக்கு ஐந்து வயதில் ஒரு மகளும், இரண்டரை வயதில் ஒரு மகளும் உள்ளனர். அப்தீனுக்கு குடிப்பழக்கம் இருந்த நிலையில் அவரது மனைவி இரண்டு ஆண்டுகளுக்கு முன் அப்தீனை விவாகரத்து செய்துள்ளார். இதனையடுத்து தனது இரண்டு மகள்களுடன் தனியாக வசித்து வந்த நிலையில், வேறு திருமணம் செய்யவும் ஆலோசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று இரவு, அப்தீனின் பேச்சைக் கேட்காமல் இரண்டு குழந்தைகளும் விளையாடிக் கொண்டே இருந்துள்ளனர். இதனால் கோபமடைந்த அப்தீன், செங்கலை எடுத்து தனது குழந்தைகள் என்றும் பாராமல் கொடூரமாக தாக்கியுள்ளார். இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அப்தீனை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரண்டு சிறுமியை அவர்களின் தந்தையே செங்கல் கொண்டு அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Man kills his two daughters brutally attacking with brick | India News.