'கேரள' அரசின் 'கழுத்தை' நெரிக்கும் கடத்தல் விவகாரம்...' - பிரதமருக்கு 'அவசர அவசரமாக' கடிதம் எழுதிய 'முதல்வர்'... வேகம் பிடிக்கும் 'விசாரணை'!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith | Jul 09, 2020 08:15 PM

சில தினங்களுக்கு முன் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து திருவனந்தபுரத்தின் மணப்பாடு பகுதியில் அமைந்துள்ள அந்நாட்டு தூதரக முகவரிக்கு வந்த பெட்டி கடத்தல் தங்கமுள்ள பெட்டி என்ற சந்தேகத்தின் பெயரில் சுங்கத்துறை அதிகாரிகள் அதனை ஆய்வு செய்தனர்.

kerala cm writes letter to pm govt gold smuggling investigation

அப்போது அதில், 30 கிலோ தங்கம் இருந்த நிலையில், அதனை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இது தொடர்பாக, தூதரக அலுவலகத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணிபுரிந்து அங்கிருந்து கடந்த ஆண்டு நீக்கப்பட்ட சரித் நாயர் என்பவருக்கு தொடர்பு இருந்த நிலையில், அவரை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த கடத்தலுக்கு பின் கேரள அரசின் தகவல் தொடர்பு பிரிவில் பணியாற்றிய ஸ்வப்னா சுரேஷ் என்பவர் உள்ள தகவல் வெளியான நிலையில் அவர் தற்போது தலைமறைவாக உள்ளார். இந்த தங்க கடத்தல் வழக்கில் கேரள முதல்வர் அலுவலகத்திற்கு தொடர்பு இருக்கும் நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயனின் முதன்மை செயலர் சிவசங்கரன் பதவி பறிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, கேரள அரசிற்கும் இந்த கடத்தல் சம்பவத்துடன் சம்மந்தம் இருப்பதாக தகவல் பரவி வரும் நிலையில், முதல்வர் உடனடியாக பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். இது தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். 'இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இந்த சம்பவம் தொடர்பாக அனைத்து தகவலும் வெளிக்கொண்டு வர வேண்டும். நாங்களும் விசாரணைக்கு தயார்' என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், கேரளாவில் நடைபெற்ற தங்க கடத்தல் வழக்கு தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியதன் பெயரில், தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் தற்போது அனுமதியளித்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Kerala cm writes letter to pm govt gold smuggling investigation | India News.