"உயிரிழப்பை தடுக்கதான் ஊரடங்கு!".. 'கொந்தளித்து' போலீஸை 'விளாசும்' கமல்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Jun 23, 2020 09:59 PM

விதிகளை மீறியதற்காக காவல் துறையின் நடவடிக்கையில் இருவர் மரணம் அடைந்தது மன்னிக்க முடியாத குற்றம் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

kamal angry tweet over police action amid lockdown

கொரோனாவை எதிர்த்து சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களிலும், தமிழகத்தின் வேறு சில மாவட்டங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தல்பட்டுள்ளது. இந்த நிலையில், விதிகளை மீறியதற்காக காவல் துறையின் நடவடிக்கையில் இருவர் மரணம் அடைந்த சம்பவம் நடந்தது. 

இதுபற்றி பேசிய கமல் தனது ட்விட்டரில், “உயிரிழப்புகளைத் தடுக்க ஊரடங்கு, அதன் விதிகளை மீறியதற்காக காவல் துறையின் நடவடிக்கையில் இருவர் மரணம். மனித உரிமை மீறல்,

அதிகார துஷ்பிரயோகம், மன அழுத்தம் என காவல் துறையின் சட்டமீறல்கள் பல உள்ளன. சட்டத்தின் காவலர்கள் சட்டம் மீறுதல் மன்னிக்கக் கூடாத குற்றம்” என்று பதிவிட்டுள்ளார். 

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Kamal angry tweet over police action amid lockdown | India News.