Veetla Vishesham Others Page USA

"கட்டுனா 2 பேரையும் தான் கட்டிப்பேன்".. ஒத்தைக்காலில் நின்ன மாப்பிள்ளை.. காத்துவாக்குல ரெண்டு காதலையும் கைப்பற்றிய பலே காதலன்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Madhavan P | Jun 20, 2022 11:23 PM

ஜார்கண்ட் மாநிலத்தில் தான் காதலித்த இரு பெண்களையும் ஒரே நேரத்தில் திருமணம் செய்திருக்கிறார் இளைஞர் ஒருவர். இந்த சம்பவம் அந்தப் பகுதி முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Jharkhand groom marries 2 women in 1 ceremony

ஜார்கண்ட் மாநிலத்தில் லோஹர்டகாவின் பாந்த்ரா பகுதியில் உள்ளது பண்டா கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த சந்தீப் ஓரான் என்பவர் இதே பகுதியை சேர்ந்த குசும் லக்ரா என்ற இளம்பெண்ணுடன் பழகி வந்திருக்கிறார். நாளடைவில் இருவருக்கும் காதல் மலரவே, இருவரும் திருமணம் செய்துகொள்ளாமலேயே லிவிங் டுகெதரில் வாழ்ந்து வந்திருக்கின்றனர். இந்த காதலர்களுக்கு ஒரு குழந்தை ஒன்றும் இருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் வேலை காரணமாக மேற்கு வங்காளத்திற்கு சென்றிருக்கிறார் சந்தீப்.

மீண்டும் காதல்

மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள செங்கல் சூளையில் கடந்த ஒருவருடமாக வேலைசெய்து வந்திருக்கிறார் சந்தீப். அப்போது அதே இடத்தில் பணிபுரிந்துவந்த சுவாதி குமாரி என்னும் இளம்பெண்ணுடன் அவருக்கு காதல் ஏற்பட்டிருக்கிறது. சுவாதிக்கும் சந்தீப்பை பிடித்துப்போகவே, இருவரும் காதலித்து வந்திருக்கின்றனர். இந்நிலையில், பணிமுடிந்து சொந்த ஊர் திரும்பியிருக்கிறார் சந்தீப்.

காதலனை பிரிந்து இருக்க முடியாமல் அவ்வப்போது, ஜார்கண்ட் சென்று சந்தீப்பை சந்தித்து வந்திருக்கிறார் சுவாதி. அப்படி ஒருநாள் தனது காதலனை சந்தித்து பேச சுவாதி வந்த போது விஷயம் அறிந்த சந்தீப்பின் கிராம மக்கள், தகராறில் ஈடுபட்டிருக்கின்றனர்.

பஞ்சாயத்து

இந்நிலையில், ஊரார் முன்னிலையில் பஞ்சாயத்து நடைபெற்றிருக்கிறது. அப்போது, தனக்கு இரு பெண்களையும் பிடித்திருப்பதாகவும், இருவரையுமே சமமாக காதலித்து வருவதாகவும் தெரிவித்திருக்கிறார் சந்தீப். மேலும், திருமணம் செய்துகொண்டால் இருவரையுமே ஒரே நேரத்தில் திருமணம் செய்துகொள்வதாக தெரிவித்திருக்கிறார். இரு பெண்களிடமும் இதுகுறித்து ஊரார் கேட்டபோது, இருவருமே ஓகே சொல்ல, அப்போதே அங்கேயே திருமணம் நடைபெற்றிருக்கிறது. சந்தீப், குசும் மற்றும் சுவாதி ஆகியோருக்கு குங்குமம் வைத்து தனது மனைவிகளாக ஏற்றுக்கொண்டார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் இளைஞர் ஒருவர் இரண்டு பெண்களை ஒரே நேரத்தில் திருமணம் செய்துகொண்ட நிகழ்வு அம்மாநிலம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Tags : #MARRIAGE #2GIRLFRIENDS #LOVE #ஜார்கண்ட் #காதல் #திருமணம்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Jharkhand groom marries 2 women in 1 ceremony | India News.