ஐபிஎல் ‘சூதாட்டம்’.. கட்டுக்கட்டாக சிக்கிய ‘கோடிக்கணக்கான’ பணம்.. அதிரவைத்த சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Oct 23, 2020 09:55 AM

ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட நான்கு பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

IPL betting racket arrested with Rs 4 cr cash in Jaipur

13-வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் துபாய், ஷார்ஜா, அபுதாபி ஆகிய மூன்று மைதானங்களில் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. கிட்டத்தட்ட லீக் சுற்றின் பாதி போட்டிகள் முடிவடைந்துவிட்டன. இதில் நேற்றைய (22.10.2020) போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் மோதின. இதில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி ஹைதராபாத் அணி அபார வெற்றி பெற்றது.

IPL betting racket arrested with Rs 4 cr cash in Jaipur

இந்நிலையில் ராஜஸ்தானில் சிலர் ஐபிஎல் போட்டி சூதாட்டத்தில் ஈடுபடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து ஜெய்ப்பூரில் நகர போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் கட்டுக்கட்டாக இருந்து 4 கோடி ரூபாய் பணம், 19 செல்போன்கள் மற்றும் 2 பணம் எண்ணும் இயந்திரங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. IPL betting racket arrested with Rs 4 cr cash in Jaipur | India News.