மண்டபத்தில் வேறமாரி என்ட்ரி கொடுத்த பெண்.. "மாப்பிள்ளை எடுத்த ஓட்டம்".. அதிர்ந்து போன மணப்பெண்!!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith Kumar V | Sep 07, 2022 04:03 PM

திருமண மேடையில் இருந்து மாப்பிள்ளை திடீரென இடத்தை காலி செய்து விட்டு ஓடிய நிலையில், அதற்கான காரணம், கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Groom run from stage after look his first wife

Also Read | அக்கவுண்ட்டில் ஏறிய பல கோடி பணம்.. "கொஞ்ச நேரத்துக்கு உலக பணக்காரராவே மாறிட்டாராம்".. கடைசியில் நடந்தது என்ன??

ஹைதராபாத் பகுதியை அடுத்த மடன்னாபெட் என்னும் இடத்தில் சையது என்ற நபருக்கும் பெண் ஒருவருக்கும் திருமணம் நடைபெற இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

இதற்கான வரவேற்பு நிகழ்ச்சியும் அங்கே நடைபெற்று வந்துள்ளது. மணமக்களின் குடும்பத்தினர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என அனைவரும் மண்டபத்தில் நிறைந்திருந்தனர்.

அப்படி ஒரு சமயத்தில் தான், மண்டபத்தில் அனைவருக்கும் கடும் குழப்பமும், அதிர்ச்சியும் ஒரு சேர காத்திருந்தது. சனா என்ற பெண் ஒருவர், சில போலீசாருடன் திடீரென மண்டபத்திற்குள் நுழைந்துள்ளார். இதனைக் கண்டதும் மாப்பிள்ளை கோலத்தில் நின்ற சையது, அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளார். மண்டபத்தில் நுழைவு வாயில் வழியாக அவர் அங்கிருந்து தப்பித்துச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

Groom run from stage after look his first wife

இதன் பின்னர் தான், சனா என்ற பெண் யார் என்பது தெரிய வந்துள்ளது. சையதின் முதல் மனைவி தான் சனா. இவர்கள் இருவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நிகழ்ந்துள்ளது. மேலும், இவர்களுக்கு ஒரு குழந்தையும் இருந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அப்படி இருக்கையில், திருமணத்திற்கு பின்னர் சனாவின் குடும்பத்தாரிடம் நிறைய பணம் கேட்டும் சையது தொந்தரவு செய்துள்ளார்.

இந்த பணத்தை கொடுக்காததால், மனைவி சனாவிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டும் சையது வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அது மட்டுமில்லாமல், மனைவியை அவர் ஒதுக்கியும் வந்துள்ளார். இதன் காரணமாக, தனது கணவர் மீது புகார் ஒன்றையும் சனா கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பாக அளித்திருந்ததாக கூறப்படுகிறது. அப்படி இருக்கையில் தான், தனக்கு தெரியாமல் வேறொரு பெண்ணை இரண்டாவதாக கணவர் சையது திருமணம் செய்யும் விஷயம், சனாவுக்கு தெரிய வந்துள்ளது.

Groom run from stage after look his first wife

இதனால், உடனடியாக போலீசாருடன் சையது திருமண நிகழ்ச்சிக்கும் சென்றுள்ளார் சனா. அந்த சமயத்தில் தான், சையது குறித்த உண்மை, அங்கே இருந்தவர்கள் அனைவருக்கும் தெரிய வந்துள்ளது. இதன் பின்னர், சையது அங்கிருந்து தப்பி ஓடியதும் குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம், சையது இரண்டாவது திருமணம் செய்ய இருந்த பெண் வீட்டார் மத்தியில் கடும் அதிர்ச்சியை உண்டு பண்ணி உள்ளது.

Also Read | "அது உண்மை தான்பா".. மருத்துவர்கள் Hand Writing குறித்து ஆனந்த் மஹிந்திரா ஜாலியாக பகிர்ந்த வீடியோ!!

Tags : #GROOM #RUN #STAGE #FIRST WIFE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Groom run from stage after look his first wife | India News.