கொரோனா ஊரடங்கால் வேலையிழந்த... 40 லட்சம் பேருக்கு உதவித்தொகை!.. மத்திய அரசு அறிவிப்பு!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manishankar | Aug 21, 2020 02:30 PM

வேலையிழப்பால் அவதிப்படும் தொழிலாளர்களுக்கு, 3 மாதங்களுக்கான பாதி சம்பளத்தை உதவித்தொகையாக வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

center govt to offer 50 salary for 3 months esic members unemployment

கொரோனா ஊரடங்கால் பலர் வேலை இழந்து, வாழ்வாதாரம் நலிந்து சிரமப்படுகின்றனர். இந்நிலையில், கடந்த மார்ச் 24 முதல் வரும் டிசம்பர் 31 வரை, வேலையிழந்துள்ள தொழிற்சாலை ஊழியர்களுக்கு (Employees State Insurance Corporation), உதவித்தொகை வழங்க மத்திய அரசு முன்வந்துள்ளது.

ESIC-இல் உறுப்பினராக இருப்பவர்கள் மட்டுமே இந்த உதவித்தொகையை பெற முடியும். அதன் அடிப்படையில், 3 மாதங்களுக்கான ஊதியத்தில் 50 விழுக்காடு தொகையை வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது.

அரசின் இந்த நடவடிக்கையால், சுமார் 40 லட்சம் தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள்.

மேலும், இந்த திட்டத்தினை அடுத்த ஆண்டு ஜூன் 30 வரை நீட்டிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Center govt to offer 50 salary for 3 months esic members unemployment | India News.