"அரசு வேலைக்கு செல்லக் கூடாது".. மனைவியை தடுக்க கணவன் செஞ்ச காரியம்.. திடுக்கிட வைத்த சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Jun 08, 2022 11:44 AM

அரசு வேலைக்கு செல்ல விரும்பிய மனைவிக்கு கணவனால் நேர்ந்த கொடுமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Man did this to cut off his wifes govt job

Also Read | "நேரத்தை எப்படி Usefull-ஆ பயன்படுத்துறது?"..நெட்டிசனின் கேள்விக்கு ஆனந்த் மஹிந்திரா சொன்ன பலே பதில்.. வைரல் ட்வீட்..!

மேற்கு வங்க மாநிலம், கிழக்கு பர்த்வான் மாவட்டம் கேதுகிராம் பகுதியைச் சேர்ந்தவர் ஷரிபுல். இவரது மனைவி ரேணு காதுன். இவர் தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வருகிறார்.

ரேணுவுக்கு அரசு மருத்துவமனை ஒன்றில் செவிலியராக வேலை கிடைத்துள்ளது. ஆனால் அரசு வேலைக்கு செல்ல வேண்டாம் என கணவர் ஷரிபுல் தடுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

Man did this to cut off his wifes govt job

சம்பவத்தன்று ரேணுகாதுன் தூங்கி கொண்டிருந்த போது, அவரது வலதுமணிக்கட்டை ஷரிபுல் கத்தியால் வெட்டியுள்ளார். துண்டாக்கிய கையை ஆபரேஷன் செய்து இணைத்து விடுவார்களோ எனக் கருதி, கையை மறைத்து வைத்து விட்டார்.

இதுகுறித்து ரேணுகாதுவின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார். இதனை அறிந்த  கணவர், ஷரிபுல் தலைமறைவானார். மனைவிக்கு அரசு வேலை கிடைத்தால் தன்னை விட்டு பிரிந்து சென்றுவிடுவார் என்ற சந்தேகத்தில் அரசு வேலையில் சேர்வதை தடுக்கவே அவரது கையை வெட்டியது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Also Read | "நீ ஒடச்சியே அதோட மதிப்பு எவ்வளவு கோடி தெரியுமா?".. காதலியோட சண்டை போட்டுட்டு மியூசியத்துக்குள்ள போன காதலன்.. பதறிப்போன போலீஸ்..!

Tags : #MAN #GOVERNMENT JOB #YOUTH #WIFE #அரசு வேலை #மனைவி #கணவன்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Man did this to cut off his wifes govt job | Tamil Nadu News.