தனுஷ் படத்தில் தரமான சம்பவம் இருக்கு..! சொல்கிறார் விக்ரம் வேதா தயாரிப்பாளர் சசிகாந்த்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக இருந்து வருகின்றது சசிகாந்தின் Ynot Studios. இன்றோடு இந்நிறுவனம் அறிமுகமாகி பத்து ஆண்டுகள் நிறைவடைகிறது.

ynot studios sashikanth's about dhanush's film

தமிழ் சினிமாவில் தரமான கதைகளை சார்ந்து எடுக்கப்படும் படங்களுக்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்து வரும் தயாரிப்பு நிறுவனம் Ynot Studios. தமிழ்ப்படம், காதலில் சொதப்புவது எப்படி, வாயை மூடி பேசவும், இறுதிச்சுற்று, விக்ரம் வேதா உள்ளிட்ட படங்களை இந்நிறுவனம் தயாரித்துள்ளது. சி.எஸ்.அமுதனின் தமிழ்ப்படம் மூலம் அறிமுகமான இந்நிறுவனம், இன்றோடு பத்து ஆண்டுகளை தமிழ் சினிமாவில் நிறைவு செய்கிறது.

இதையடுத்து, தயாரிப்பாளர் சசிகாந்த் வெளியிட்டுள்ள பதிவில், இந்த பத்தாவது வருட நிறைவில், எங்கள் நிறுவனத்திற்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். தமிழ் சினிமாவில் புதிய அலையை உருவாக்கும் நிறுவனமாக Ynot Studios அங்கிகரிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சிக்குறியது. மேலும் இது போன்ற வித்தியாசமான, தரமான  படங்களை இனிவரும் காலங்களிலும் கொடுக்க எங்கள் நிறுவனம் தொடர்ந்து முயற்சி செய்யும். இந்த வருடம் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில்  தனுஷ் நடிக்கும் படம், மண்டேலா,  ஏலே ஆகிய படங்களை Ynot Studios இடம் இருந்து எதிர்ப்பார்க்கலாம்' என அவர் பதிவிட்டுள்ளார். 

மேலும், இதுவரை Ynot Studios எடுத்த படங்களின் கதாபாத்திரங்களின் மத்தியில் அருவாளுடன் தனுஷ் நிற்பது போன்ற போட்டோவை அவர் வெளியிட்டுள்ளார்.  தொடர்ந்து தரமான படங்களை கொடுத்துவரும் ynot studios தயாரிக்க, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படத்திற்கு 'D40' என தற்போது பெயரிடப்பட்டுள்ளது.  சசிகாந்தின் பதிவின் மூலம், தனுஷ் படம் தரமாக வரும் என நம்பலாம். 

Entertainment sub editor