''ரெண்டு பேரும் பழிவாங்க வந்துருக்காங்க'' - புலம்பும் சாண்டி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் திடீரென சாக்ஷி, அபிராமி, மோகன் வைத்தியா உள்ளிட்டோர் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தனர். ஏற்கனவே கவினுடன் பிரச்சனையில் இருக்கும் வனிதாவும், ஷெரினும் சாக்ஷி வந்ததும், கவினை பற்றி கூடிக் கூடி பேசிக்கொண்டனர்.

Vanitha, Losliya, Kavin, Sandy Bigg Boss 3 Promo 1 Sept 4

மேலும் மோகன் வைத்தியா, சாண்டி மற்றும் கவினிடம் 'என் டிரௌசர குடு' என்று ஜாலியாக ரகளை பண்ணிக் கொண்டிருந்தார். பின்னர் லாஸ்லியாவிடம் அபிராமி, 'நான் உணர்ச்சிவசப்பட்டதுனால தான் கேமை சரியா விளையாட முடியாம வெளிய இருக்கேன். நீ ஃபைனல் வரைக்கும் போய் ஜெய்ச்சா தான் எனக்கும் சாக்ஷிக்கும் மகிழ்ச்சி. எது என்னுடைய வேண்டுகோள்' என்றார்.

இந்நிலையில் இன்று (செப்டம்பர் 04 ) வெளியான முதல் புரோமோவில், சாண்டி, கவின், அபிராமி, தர்ஷன் உள்ளிட்டோர் பேசிக்கொண்டிருக்கின்றனர். அப்போது அபிராமியை பார்த்து சாண்டி, ''நீ மட்டும் தான் எப்படி போனியோ அப்படியே உள்ள வந்துருக்க, அவங்க ரெண்டு பேரும் பழிவாங்க வந்துருக்காங்க. நைனா (மோகன் வைத்தியா) ஃபுல் பீக்ல இருக்காரு'' என்று புலம்புகிறார். அதற்கு அபிராமி, நான் ஜாலியா இருக்க வந்துருக்கேன் டா'' என்கிறார்.