திரௌபதி விவகாரத்தில் பொங்கிய டிவி ஆன்கர் அனிதா சம்பத் : ''அவ்ளோதான் சொல்ல முடியும்'' - என அதிரடி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல டிவி ஆன்கர் அனிதா சம்பத், திரௌபதி படம் பாராட்டு குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

திரௌபதி குறித்து அனிதா சம்பத் சொல்வது இதுதான் | tv anchor anitha sampath over fake id's praise for mohan.g's draupathi

மோகன்.ஜி இயக்கத்தில் உருவான திரைப்படம் திரௌபதி. இத்திரைப்படத்தில் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடித்திருந்தார். ஷீலா ராஜ்குமார், கருணாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். பல்வேறு விவாதங்களை கிளப்பிய திரௌபதி திரைப்படம், இப்போது தியேட்டரில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.

இந்நிலையில் பிரபல டிவி செய்தி வாசிப்பாளரான அனிதா சம்பத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அவரை போன்ற ஃபேக் ஐடியில் இருந்து, திரௌபதி படத்தை பாராட்டிய பதிவை பகிர்ந்துள்ள அவர், 'ஃபேக் அக்கவுன்ட், அவ்ளோதான் சொல்ல முடியும், ஏதோ ஒரு கேவளவாதி அவன் சொல்ல நினைக்கிற எல்லாத்தையும் கோழைத்தனமா என் பெயர பயன்படுத்தி சொல்லிட்டு இருக்கான், ஐய்யய்யோ இது நான் இல்லனு கதறி அவனுக்கு இன்பார்ட்டன்ஸ் கொடுக்க விரும்பல, இந்த அக்கவுன்ட்டை ஃபாலோ செய்யாதீர்கள், என் ஒரிஜினல் அக்கவுன்ட் எனது பயோவில் சேர்க்கப்படும்' என அவர் தெரிவித்துள்ளார்.

Entertainment sub editor