பா.இரஞ்சித்தை அழைக்கும் திரௌபதி இயக்குநர் மோகன்..! ''நானும் அன்போடு..''. என்ன காரணம் தெரியுமா.?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

திரௌபதி இயக்குநர் மோகன்.ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் பா.இரஞ்சித்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

பா.இரஞ்சித்தை அழைக்கும் திரௌபதி இயக்குநர் மோகன் | richard rishi's draupathy director mohan.g invites pa.ranjith to see his films.

பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மோகன். இவர் தற்போது திரௌபதி என்கிற படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் ரிஷி ரிச்சர்ட் ஹீரோவாகவும், ஷீலா ராஜ்குமார், கருணாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கடந்த வாரம் வெளியான இத்திரைப்படத்தை காண பெருமளவு கூட்டம் தியேட்டர்களுக்கு விசிட் அடிப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இத்திரைப்படத்தை தியேட்டரில் வந்து பார்க்க, இயக்குநர் பா.இரஞ்சித்துக்கு அழைப்பு விடுத்துள்ளார் திரௌபதி இயக்குநர் மோகன்.ஜி. தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே கோபி தனது ட்விட்டர் பக்கத்தில் பா.இரஞ்சித்தை டேக் செய்து, 'நீங்கள் திரௌபதி படத்தை பார்க்க வர வேண்டும், உங்களை தொடர்பு கொள்ள முடியவில்லை, அதனால் ட்விட்டர் மூலமாக அழைப்பு விடுக்கிறேன்' என அவர் பதிவிட்டுள்ளார். இதையடுத்து இந்த பதிவை கோட் செய்து, ' நானும் அன்புடன் அழைக்கிறேன் என் சகோதரனை' என அவர் ட்விட்டியுள்ளார்.

Entertainment sub editor