"சுஷாந்த் 3 நாட்களுக்கு முன்பு, தந்தைக்கு போன் செய்து உருக்கமாக பேசினார்" - உறவினர் தகவல்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சமீப காலமாகவே இந்திய சினிமாவில் துக்க நிகழ்வுகள் அதிகரித்து வருகிறது. கலைஞர்கள் பலரும் ஒன்றன்பின் ஒன்றாக மரித்து வருவது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அந்த வகையில் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்போது மரணமடைந்த செய்தி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவருக்கு பிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது இறப்புக்கான காரணம் வெளிவராத நிலையில், விசாரணை நடைப்பெற்று வருகிறது.

சுஷாந்த் தன் தந்தையிடம் உருக்கமாக பேசியது Sushant Singh last phone conversation with father

நடிகர் சுஷாந்த் சிங்கின் தந்தை KK சிங் பாட்னாவில் வசித்து வருகிறார். அவர் ஓய்வு பெற்ற அரசு ஊழியர். அவரது மனைவி 2002-ஆம் ஆண்டு இறந்துவிட்டார். பிரபல ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள செய்தியின் அடிப்படையில் அவர் தனது தந்தைக்கு அடிக்கடி போன் செய்து அவரது உடல்நலம் பற்றி விசாரிப்பது வழக்கம். மூன்று நாட்களுக்கு முன்பு கூட அவர் தனது தந்தையின் வீட்டில் பணிசெய்யும் லக்ஷ்மி தேவியிடம் "தந்தையை கொரோனா வைரஸிடம் இருந்து மிகவும் பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள்" என்று கூறியுள்ளார். இந்நிலையில் இன்று மகனிடமிருந்து போன் வந்ததும் ஆவலுடன் எடுத்த தந்தைக்கு அவரது இறப்பு செய்தி இடியாய் விழுந்துள்ளது. அவர் மிகவும் அதிர்ச்சியில் இருப்பதாக நெருங்கிய உறவினர்கள் கூறியுள்ளனர். ஆயிரம் காரணம் சொன்னாலும் தற்கொலை எதற்குமே சரியான தீர்வு ஆகாது என்பது தான் நடிகர் சுஷாந்தின் மரணம் நமக்கு கற்றுக் கொடுக்கும் பாடம்.

மேலும் செய்திகள்

சுஷாந்த் தன் தந்தையிடம் உருக்கமாக பேசியது Sushant Singh last phone conversation with father

People looking for online information on Death, Family, Sushant Singh will find this news story useful.