இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு, தனது தாய் பற்றி உருக்கமான பதிவிட்ட நடிகர் சுஷாந்த் சிங்...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சமீப காலமாகவே இந்திய சினிமாவில் துக்க நிகழ்வுகள் அதிகரித்து வருகிறது. கலைஞர்கள் பலரும் ஒன்றன்பின் ஒன்றாக மரித்து வருவது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அந்த வகையில் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்போது மரணமடைந்த செய்தி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவருக்கு பிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது இறப்புக்கான காரணம் வெளிவராத நிலையில், விசாரணை நடைப்பெற்று வருகிறது.

கடைசியாக தனது தாய் பற்றி பதிவிட்ட சுஷாந்த் சிங் Sushant Singh last heart breaking post on his late mother

இந்த நிலையில் அவர் கடைசியாக  சில தினங்களுக்கு முன்பு தனது தாயின் புகைப்படத்தை பதிவிட்டு "தெளிவில்லாத கடந்தகாலம் கண்ணீர்த்துளியாக மாறுகிறது. முடிவே இல்லாத கனவு சிரிப்பு தடத்தைப் உருவாக்கி கொண்டிருக்கிறது. அதோடு மிகவும் வேகமாக ஓடும் வாழ்க்கை இதற்கு இரண்டுக்கும் நடுவில் பேச்சு வார்த்தை நடத்தி கொண்டிருக்கிறது"" என்று பதிவிட்டுள்ளார். கடைசியில் 'மா' என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு கடைசி நேரத்தில் தனது தாயின் பிரிவை அவர் எவ்வளவு உணர்ந்துள்ளார் என்பதை காட்டுகிறது. அவரது தாய் 2002-ஆம் ஆண்டு, சுஷாந்த் சிங்கின் பதின்பருவத்திலேயே மரணம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு, தனது தாய் பற்றி உருக்கமான பதிவிட்ட நடிகர் சுஷாந்த் சிங்...! வீடியோ

மேலும் செய்திகள்

கடைசியாக தனது தாய் பற்றி பதிவிட்ட சுஷாந்த் சிங் Sushant Singh last heart breaking post on his late mother

People looking for online information on Last post, Mother, Sushant Singh will find this news story useful.