www.garudabazaar.com

'லைவ்' ரிலே கொஞ்சம் டிலே... பத்த வெச்ச 'பிக்பாஸ்' வச்சு செஞ்ச போட்டியாளர்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நேற்று பிக்பாஸ் வீட்டில் இருக்க தகுதி அற்றவர்களாக நாமினேட் செய்யப்பட்ட 8 பேரையும் உங்களுக்கு பிரீ பாஸ் தருகிறேன் என ஆசைகாட்டி பிக்பாஸ் அவர்களை ஒரு ரூமில் வைத்து சண்டை போட்டுக்கொள்ள வைத்தார். இதில் கடந்த வாரம் நாமினேட் ஆனவர்களில் அதிகம் வாக்கு பெற்ற நபர்கள் வரிசைப்படி சுரேஷ் சக்கரவர்த்தி வெளியில் அனுப்பி வைக்க அவர்கள் அனைவரும் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் வெளியேறினர்.

Suresh Chakravarthy Speech was broadcast on BB House

சனம் ஷெட்டி, ஷிவானி, சம்யுக்தா, ரேகா, கேப்ரியலா என 5 பேரை மற்றவர்கள் சேர்ந்து சுரேஷ் தலைமையில் வெளியே அனுப்பினர். கடைசியில் ரம்யா பாண்டியன், ஆஜித், சுரேஷ் சக்கரவர்த்தி மூவர் மட்டுமே எஞ்சியபோது பிக்பாஸ் தன்னுடைய திருவிளையாடலை காண்பித்தார். அதாவது மற்றவர்கள் பேசும்போது சும்மா இருந்துவிட்டு சுரேஷ் சக்கரவர்த்தி பேசுவதை மற்ற ஹவுஸ்மேட்ஸ்க்கு படம் போட்டு காண்பித்து விட்டார்.

அவர் ரியோ, நிஷா, வேல்முருகன், அனிதா பற்றி கூறியதை பார்த்து ஷாக்கான நபர்கள் அவர் வெளியே வந்ததும் பிடித்து கொண்டனர். வேல்முருகன் வேட்டி விவகாரத்தில் காண்டாகி அவருடன் சண்டைக்கே போய் விட்டார். ரியோவும் சண்டை போட ட்ரை செய்தார். ஆனால் அதற்கு எல்லாம் அசருகிற ஆளா அவர்? நீங்க உங்க வேலைய பாருங்க நான் என் வேலையை பாக்குறேன் என சாப்பிட ஆரம்பித்து விட்டார். இதைப்பார்த்த ரசிகர்கள் என்ன ஒரு தில்லு எங்க தலைக்கு என சுரேஷை புகழ்ந்து வருகின்றனர்.

Suresh Chakravarthy Speech was broadcast on BB House

People looking for online information on Suresh Chakravarthy will find this news story useful.