"நான் தளபதி விஜய் ரசிகன்" - வெளிநாட்டு அதிபர் மகன்... கடல் தாண்டியும் கில்லியாக நிற்கும் விஜய்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகம் முழுவதும் கொரோனா நோய் பரவி வருகிறது. பல நாடுகளும் இந்த நோயினால் பாதிக்கப்பட்டு இருக்கின்றன. எனவே பல நாடுகளிலும் ஊரடங்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அவ்வாறே இலங்கை தேசத்திலும் கொரோனா பாதிப்புகள் இருக்கின்றன. அங்கேயும் ஊரடங்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

நான் தளபதி விஜய் ரசிகன் என்று வெளிநாட்டு அதிபர் மகன் பதிவு Srilankan prime minister son tweets he is fan of Thalapathy vijay

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மகன் நாமல் ராஜபக்ஷ ஒரு பதிவிட்டுள்ளார். அந்த பதிவை பார்த்த தளபதி ரசிகர்கள் அதனை வைரலாகி வருகின்றனர். தமிழ் சினிமா ரசிகர்களின் தளபதியாய் உயர்ந்து நிற்பவர் நடிகர் விஜய். அவரது நடனத்துக்கும் நடிப்புக்கும் பல கோடி மக்கள் ரசிகர்களாக உள்ளனர்.

இந்நிலையில் இலங்கை அதிபரின் மகன் நாமல் ராஜபக்ஷ தானும் ஒரு தளபதி ரசிகர் என்று புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் "எனது பேவரைட் படமான பிகிலை பார்த்துக்கொண்டிருக்கிறேன். இது எத்தனாவது முறை என்று தெரியவில்லை. நடிகர் விஜய் தான் எப்போதும் எனது விருப்ப நடிகர்" என்று கூறியுள்ளார். வெளிநாட்டு அதிபரின் மகனையும் தளபதி விஜய் ஈர்த்து உள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Entertainment sub editor