'நடிகை ஜெயஸ்ரீயின் தற்கொலை முயற்சிக்கு உண்மை காரணம் இது தான்' - அவரது நண்பர் பகீர் பேட்டி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'வம்சம்' உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஜெயஸ்ரீ. இவருக்கும் 'ஆஃபிஸ்', 'அதே கண்கள்', 'சித்திரம் பேசுதடி' உள்ளிட்ட தொடர்களில் நடித்து வந்த ஈஸ்வர் என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது.

Serial Actress Jayashree's friend Ganesh ram speaks about her

இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் ஈஸ்வர் குடித்துவிட்டு தன்னை துன்புறுத்துவதாகவும், வேறு நடிகையுடன் தொடர்புள்ளதாகவும் போலீஸில் ஜெயஸ்ரீ புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. அதன் பிறகு ஈஸ்வர் போலீஸால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதனையடுத்து இருவரும் ஒருவர் மீது ஒருவர் சரமாரியான குற்றச்சாட்டுக்களை அடுக்கினர்.

இந்நிலையில் நடிகை ஜெயஸ்ரீ தற்கொலைக்கு முயற்சி செய்ததாகவும் அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியானது. அவர் தற்கொலை முயற்சிக்கு முன் தனது நண்பருக்கு கடிதம் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது. அதில் தான் கடுமையான மன அழுத்தத்தில் இருப்பதாகவும், தன் மகளை நேரம் கிடைக்கும் போதெல்லாம் பார்த்துக்கொள்ளுமாறும் குறிப்பிட்டிருந்தாராம்.

இந்நிலையில் ஜெயஸ்ரீயின் நண்பர் கணேஷ் ராம் Behindwoods Airக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், அவர் கணவர் சம்மந்தப்பட்ட விஷயங்கள் பல பக்கங்கள்ல இருந்து அழுத்தம் கொடுத்துட்டு இருக்கு.  அவங்க மேல அபாண்டமா பழி சுமர்த்தி டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்பிருக்காங்க.

மேலும் நான் கேள்விபட்ட விஷயம் என்னன்னா, போகி அன்னைக்கு அவங்க கோவிலுக்கு போயிட்டு இருக்கும் போது அவங்க காரை வழி மறித்து யார கேட்டு இந்த கார யூஸ் பண்ணிட்டு இருக்க என்று மிரட்டியிருக்காங்க. அதுவே டவுனாய்ட்டாங்க

பல பக்கங்கள்ல இருந்து பிரச்சனை வந்தா மனசு வீக்காதான போகும். தன்னை அழிச்சுகிற அளவுக்கு போறாங்கனா அவங்க எந்த அளவுக்கு பிரச்சனைகளை சந்திச்சிருப்பாங்கனு பார்த்துக்கோங்க'' என்றார்.

'நடிகை ஜெயஸ்ரீயின் தற்கொலை முயற்சிக்கு உண்மை காரணம் இது தான்' - அவரது நண்பர் பகீர் பேட்டி வீடியோ

Entertainment sub editor