சுஷாந்த் சிங்கின் மரணம் - Suicide or Murder ?-க்கு பிறகு உருவாகும் இரண்டாவது படம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம் பிரபலங்கள் மற்றும் ரசிகர்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது மரணம் குறித்த காரணங்கள் இன்னும் முழுமையாக தெரியவில்லை. அவர் நீண்ட நாட்களாக மன அழுத்தத்தில் இருந்ததாகவும், அதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது.

Second movie on actor Sushant Singh Rajput announced ft Sanoj Mishra | சுஷாந்த் சிங்கின் மரணம் குறித்து இரண்டாவது படம் அறிவிப்பு

இந்நிலையில் சுஷாந்த்தின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு சூசைட் ஆர் மர்டர் ? (Suicide Or Murder ?) என்ற பெயரில் திரைப்படம் ஒன்றை இயக்கவிருப்பதாக இயக்குநர் விஜய் சேகர் குப்தா அறிவித்தார். இந்த தகவல் பாலிவுட் திரைப்பட உலகில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அடுத்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இயக்குநர் சனோஜ் மிஷ்ரா சுஷாந்த் என்ற பெயரில் திரைப்படம் ஒன்றை அறிவித்துள்ளார். இந்த திரைப்படம் சுஷாந்த்தின் வாழ்க்கை வரலாறு இல்லை என்றும் கனவுகளுடன் மும்பை வந்து கஷ்டப்படும் இளைஞர்கள் பற்றியது என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த படத்தை ரோட் புரொடக்ஷன் நிறுவனம் மற்றும் சனோஜ் மிஷ்ரா நிறுவனம் தயாரிக்கவுள்ளதாம். இந்த படம் மும்பை மற்றும் பீஹாரில் தயாராகிறதாம்.

தொடர்புடைய இணைப்புகள்

Second movie on actor Sushant Singh Rajput announced ft Sanoj Mishra | சுஷாந்த் சிங்கின் மரணம் குறித்து இரண்டாவது படம் அறிவிப்பு

People looking for online information on Sushant Singh Rajput will find this news story useful.