கொரோனா : பிரபல நடிகை அதிரடி... எனது வீடுகளில் தங்கியிருக்கும் யாரும் வாடகை தரவேண்டாம்...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகம் முழுவதும் கொரோனா நோய் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க வரும் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனையடுத்து மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கி இருக்கின்றனர். பிரபலங்களுக்கும் இதே நிலைமைதான்.

கொரோனாவில் மக்களுக்கு உதவும் நடிகை Popular actress refuses rent from tenants

இந்நிலையில் ஹிந்தி நடிகை அமிர்தா ராவ் ஒரு அதிரடி முடிவெடுத்துள்ளார்.  மும்பையில் இருக்கும் அவரது வீடுகளில் பல குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அதிலும் பலர் சினிமா துறையை சார்ந்தவர்கள். இந்நிலையில் கொரோனா காரணமாக அவர்கள் அனைவரும் சொந்த ஊர்களில் சிக்கி இருக்கின்றனர்.

அவர்களுக்கு உதவி செய்யும் விதமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஜூலை வரை யாரும் வாடகை அளிக்க வேண்டாம் என்று அவர் அறிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில் "இந்த சூழ்நிலை பல விஷயங்களை  புரிய வைத்துள்ளது. என்னால் முடிந்த வரை உதவி செய்வேன்" என்று கூறியுள்ளார். மேலும் தனது வீட்டில் வேலை செய்யும் பணியாட்கள் சொந்த ஊர்களில் தஞ்சம் அடைந்திருக்கின்றார். அவர்களுக்கு அவர் சம்பளம் அளித்து கொண்டிருக்கிறாராம்.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

கொரோனாவில் மக்களுக்கு உதவும் நடிகை Popular actress refuses rent from tenants

People looking for online information on Amrita Rao, Corona will find this news story useful.