www.garudabazaar.com

"சாமி தரிசனம் செய்த கோயில் பிரசாதத்தை விஜய்க்கு கொடுப்பீங்களா?".. S.A. சந்திரசேகர் நச் பதில்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய்.

SA Chandrasekhar Press Meet at Rameshwaram Temple

Also Read | விஜய் படங்கள் தொடர்ந்து ஹிட் ஆக இதுதான் காரணமா.? S.A. சந்திரசேகர் சொல்வது என்ன?  

Beast படத்திற்கு பிறகு நடிகர் விஜய் நடிப்பில் 'வாரிசு' படம்  கடந்த ஜனவரி மாதம் 11 ஆம் தேதி வெளியானது. இப்படத்தை வம்சி பைடிபல்லி இயக்கி இருந்தார்.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் தயாரித்த இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். 

தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் உருவான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

SA Chandrasekhar Press Meet at Rameshwaram Temple

Images are subject to © copyright to their respective owners.

வாரிசு படத்தினை தொடர்ந்து நடிகர் விஜய்யின் அடுத்த லியோ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 2ஆம் தேதி துவங்கியது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடிக்கிறார். மேலும் பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மிஷ்கின், கௌதம் மேனன், அர்ஜூன், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ் ஆகியோர் நடிப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

SA Chandrasekhar Press Meet at Rameshwaram Temple

Images are subject to © copyright to their respective owners.

நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் பிரபல இயக்குனராக விஜய்யின் பல திரைப்படங்களை தொடக்க காலத்தில் இயக்கியவர். விஜய்யை வைத்து படம் இயக்கும் முன்பே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் சில படங்களை இயக்கியுள்ளார்.

இந்நிலையில் நடிகர் விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார்.

அப்போது பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய சந்திரசேகர் சில கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.

SA Chandrasekhar Press Meet at Rameshwaram Temple

குறிப்பாக, "சாமி தரிசனம் செய்த கோயில் பிரசாதத்தை நடிகர் விஜய்யிடம் கொடுப்பீங்களா?" என்ற கேள்விக்கு "எல்லாம்.. ஏங்க, நான் வந்து ராசி நட்சத்திரம் அடிப்படையில் கோயிலில் அர்ச்சனை செய்யும் போது முதலில் என்னுடைய ராசி நட்சத்திரம் சொல்வேன். இரண்டாவது என்னுடைய மகனின் ராசி நட்சத்திரம் சொல்வேன். மூன்றாவது தான் என்னுடைய மனைவியின் ராசி நட்சத்திரம் சொல்வேன். அதுக்கப்புறம் தான் என் மருமகள் உடையதை சொல்வேன். அப்பறம் பேரன் பேத்தி உடையதை சொல்வேன். புரியுதா?. நான் செய்யும் ஒவ்வொரு பிரார்த்தனையும் எனக்காக மட்டும் அல்ல. என்னுடைய மகனின் குடும்பம், என் மகனை நேசிக்கும் கோடானுகோடி ரசிகர்களுக்கும் சேர்த்து தான் பிராத்தனை செய்வேன்" என சந்திரசேகர் பதில் அளித்தார்.

Also Read | "விஜய் மக்கள் இயக்கம் எப்போ அரசியல் கட்சியாக மாறும்?".. பிரபல கோயிலில் S.A.C அளித்த பதில்!

தொடர்புடைய இணைப்புகள்

SA Chandrasekhar Press Meet at Rameshwaram Temple

People looking for online information on SA Chandrasekar, Vijay will find this news story useful.