Reliable Software
www.garudabazaar.com
www.garudabazaar.com

ரித்திகா மருத்துவமனையில் அனுமதி... என்னவோ என்று பயந்த ரசிகர்கள்... ஆனால் காரணம் இதுதானாம்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. குக் வித் கோமாளி நிகழ்ச்சி வரலாற்றில் இதுவரை நடந்திராத புதிய மாற்றமொன்று சமீபத்தில் செய்யப்பட்டது. அதாவது வைர்ல்டு  கார்டு போட்டியாளராக நடிகை ஒருவர் களமிறங்கினார் . இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான் இப்படி வைர்ல்டு  கார்டு போட்டியாளர்கள் நுழைவது வழக்கம். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்யலக்ஷ்மி தொடரில் நடிக்கும் ரித்திகா என்ற நடிகை, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நுழைந்தார். இவர் சூப்பர் சிங்கர் கிராண்ட் பினாலே அறிமுக நிகழ்ச்சியிலும் பங்கேற்று ஸ்பெஷல் பெர்பாமன்ஸ் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சில வாரங்களே இருந்த நிலையில் ரித்திகா குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

rithika sudden post made fans sad ரித்திகா மருத்துவமனையில் அனுமதி

இந்நிலையில் நடிகை ரித்திகா கையில் மருந்து ஏற்றிக்கொள்வது போல ஒரு புகைப்படத்தை தனது  இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு "இன்ஸ்டாகிரம் நண்பர்களே உங்கள் உடல் நலத்தை பார்த்துக் கொள்ளுங்கள்" என்று கூறியிருந்தார். இதனைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியாகி என்ன காரணமாக இருக்கும் என்று கேள்வி எழுப்பி வந்தனர். நடிகை ரித்திகா அதற்க்கு பதிலளித்துள்ளார். அவர் கூறும் பொழுது "இன்ஸ்டாகிராம் குடும்பத்திற்கு வணக்கங்கள். எனக்கு பயப்படும் அளவிற்கு ஒன்றுமில்லை. புட் பாய்சன் மற்றும் குறைவான இரத்த அழுத்தம் காரணமாக தனது உடல், வலிமையற்று காணப்பட்டது. இதனால் எனக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டுள்ளது. இப்பொழுது நான் சிறிது நலமாக இருக்கிறேன். எனக்காக வருத்தப்படாதீர்கள். உங்கள் அன்புக்கு நன்றி" என்று கூறியுள்ளார்.

ரித்திகா மருத்துவமனையில் அனுமதி... என்னவோ என்று பயந்த ரசிகர்கள்... ஆனால் காரணம் இதுதானாம்..! வீடியோ

Tags : Rithika

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

rithika sudden post made fans sad ரித்திகா மருத்துவமனையில் அனுமதி

People looking for online information on Rithika will find this news story useful.