பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சோம் பற்றி மனம் திறந்த ரம்யா..." நீங்க திரும்ப கேட்டாலும்"

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடுமையான போட்டியாளராக திகழ்ந்தவர் நடிகை ரம்யா பாண்டியன். பொதுவாக அமைதியா இருந்தாலும், பேச வேண்டிய இடத்தில் தனது கருத்தை நறுக்கென சொல்லி விடுகிறார். பாலாஜி கூறும்போது கூட "ஆண்களுக்கு பெண்கள் எந்த விதத்திலும் குறைந்தவர்கள் இல்லை என்பதற்கு ரம்யா ஒரு சிறந்த உதாரணம் என்று கூறியிருந்தார். அப்படி தனது சாதுர்ய குணத்தினால் பல சூழ்நிலைகளை சுமுகமாக மாற்றுவது அவருக்கே உரிய தனித்திறமை. இந்நிலையில் பிக்பாஸ் நான்காம் சீசனின் இறுதி நாள் வரை சென்ற ஒரே பெண் போட்டியாளர் அவர்தான்.

Ramya pandiyan answers question on som சோம் பற்றி மனம் திறந்த ரம்யா

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு முதல்முறையாக ரம்யா பாண்டியன் லைவில் வந்துள்ளார். அப்போது ரசிகர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு அவர் பதில் அளித்துள்ளார். அப்படி ரசிகர் ஒருவர் சோம் பற்றி கேட்க, அவர் கூறும் பொழுது "சோம் ஒரு நல்ல மனிதர். மிகவும் சிறந்த ஜென்டில்மேன். அனைவர் மேலும் அக்கறை உள்ள ஒரு நபர். டாஸ்க்குகளின் போது சிறந்த முனைப்பை மேற்கொள்பவர். ஆரம்பம் முதல் முடிவு வரைக்கும் டாஸ்க்குகளின் போது சிறந்த முனைப்பு காட்டியவர். கண்டிப்பாக சூப்பராக பிக்பாஸ் கேமை விளையாடினார். அதைவிடவும் ஒரு நல்ல மனிதர். நிச்சயமாக நான் மற்றவர்களுடன் எப்படி ஒரு நட்புடன் பழகினேனோ அப்படிதான் சோம்முடனும். நீங்கள் திருப்பி திருப்பி கேட்டாலும் அது தான் என்னுடைய பதில். மற்றபடி வேறு எதுவுமே கிடையாது" என்று கூறியுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சோம் பற்றி மனம் திறந்த ரம்யா..." நீங்க திரும்ப கேட்டாலும்" வீடியோ

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Ramya pandiyan answers question on som சோம் பற்றி மனம் திறந்த ரம்யா

People looking for online information on Ramya Pandiyan will find this news story useful.