www.garudabazaar.com
iTechUS

"எப்படி இதை அசால்ட்டா டீல் பண்றீங்க?".. மகேஷ்வரியின் கேள்விக்கு விக்ரமனின் 'நச்' ரிப்ளை..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

Mageshwari asks Vikraman how to over come problems

இந்த போட்டி சுமார் 90 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில், கடந்த வாரம் ADK பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளார். இந்நிலையில், ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அசல் கோலார், GP முத்து, மெட்டி ஒலி சாந்தி, ராபர்ட் மாஸ்டர், தனலட்சுமி, மணிகண்ட ராஜேஷ், குயின்சி, ராம், ஷெரினா,  நிவாஷினி மற்றும் மகேஷ்வரி ஆகியோர் கடந்த வாரம் ரீ எண்ட்ரி கொடுத்திருந்தனர்.

இதனால் பிக்பாஸ் வீடு கலகலப்பாக மாறிய நிலையில், வார இறுதி நாட்களில் வழக்கம்போல கமல் தோன்றி கடந்த வாரம் நடைபெற்றவை குறித்து போட்டியாளர்களுடன் உரையாடினார். அப்போது இந்த வாரம் ADK வீட்டில் இருந்து வெளியேறுவதாகவும் கமல் தெரிவித்திருந்தார். இதனால் சக போட்டியாளர்கள் சோகமடைந்தனர்.

இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டிற்குள் தற்போது ரச்சிதா, ஆயிஷா ஆகியோர் தற்போது என்ட்ரி கொடுத்துள்ளனர். பிக் பாஸ் வீட்டின் சிறந்த போட்டியாளர்களாக வலம் வந்த இவர்கள் இருவரையும் உள்ளே இருந்த ஹவுஸ்மேட்ஸ் மிக உற்சாகமாக வரவேற்றிருந்தனர். அதிலும் ரச்சிதாவுக்கு மிகவும் நெருங்கிய தோழியான ஷிவின் அவரை கட்டியணைத்து கண்கலங்கியது பலரையும் மனம் உருக வைக்கும் வகையில் அமைந்திருந்தது.

இந்நிலையில், பிக்பாஸ் வீட்டுக்குள் முட்டை விவகாரம் குறித்து போட்டியாளர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டிருந்தது. மகேஷ்வரியுடன் அசீம் மற்றும் மணிகண்டா பேச, பின்னர் அது வாக்குவாதமாகிவிட்டது. இதனிடையே விக்ரமன் - அசீம் இடையே வாக்குவாதம் நடைபெற சக போட்டியாளர்கள் இருவரையும் சமாதானம் செய்திருந்தனர். இப்படி சூழ்நிலையில், மகேஷ்வரி மற்றும் விக்ரமன் இருவரும் பேசிக்கொண்டிருக்கின்றனர்.

அப்போது மகேஷ்வரி,"சண்டை எல்லாம் போட்டா, அன்னைக்கு எனக்கு தூக்கமே வராது. ஆனா நீங்க எல்லாம் அசால்ட்டா வந்து படுத்துடுறீங்க. அடுத்தநாள் நான் கொஞ்சம் தூங்குவேன். ஆனா, சண்டை போட்ட அன்னைக்கு சிரமம்" என்கிறார். அப்போது பேசும் விக்ரமன்,"எனக்கு அதை பத்தி ப்ராசஸ் பண்றது சீக்கிரமே முடிஞ்சிடும். உண்மைய சொல்லனும்னா நான் பெரிய தலைவர்களை பத்தி யோசிப்பேன். அவங்க இந்த சூழ்நிலையில இருந்தா எப்படி நடந்துப்பாங்க-ன்னு யோசிப்பேன். அப்போவே செட்டில் ஆகிடுவேன்" என்கிறார்.

அப்போது, பொதுவாக வீட்டில் யாரிடமாவது சண்டை போட்டால் அவருடைய முகத்தை பார்க்கவே சிரமமாக இருக்கும் என்கிறார் மகேஷ்வரி. அதற்கு தான் போர்வையால் முகத்தை மூடியபடி படுத்துக்கொள்வேன் என சிரித்தபடி பதில் சொல்கிறார் விக்ரமன். இதனை கேட்டு சிரிக்கும் மகேஷ்வரி,"ஓ, அப்படின்னா நீங்க தூங்க மாட்டீங்களா? நான்கூட போர்வைய போத்தி தூங்குறீங்கன்னு தப்பா நெனச்சுட்டேன்" என சிரித்தபடி சொல்கிறார். அவருக்கு பதில் அளிக்கும் விக்ரமன்,"அப்படி இல்ல, சில நேரம் அந்த விஷயம் பத்தி அப்படியே யோசிச்சிட்டு இருப்பேன். தூக்கம் வந்தா அப்படியே தூங்கிடுவேன்" என்கிறார்.

தொடர்புடைய இணைப்புகள்

Mageshwari asks Vikraman how to over come problems

People looking for online information on Biggboss6Tamil, Mageshwari, Vikraman will find this news story useful.