''என் தாய் இல்லனா நான் இறந்த இடத்துல புல்லு முளைச்சிருக்கும்'' - லாரன்ஸ் உருக்கம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ராகவா லாரன்ஸ் இயக்கி, நடித்துள்ள படம் 'காஞ்சனா 3'. இந்த படத்தில் ஓவியா, வேதிகா, கோவை சரளா, சூரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு தமன் பின்னணி இசையமைத்துள்ளார். 

Raghava Lawrence Emotional speech in mothers day event

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.  அதனைத் தொடர்நது இவர் 'காஞ்சனா' படத்தை ஹிந்தியில் அக்ஷய் குமாரை வைத்து ரீமேக் செய்துவருகிறார். இந்த படத்தில் கியாரா அத்வானி, அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்துவருகிறார்.

இந்நிலையில் இவர் அன்னையர் தினத்தை முன்னிட்டு ஆதரவற்றை பெற்றோர்களை காக்கும் பொருட்டு தாய் என்கிற பெயரில் ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றை தமிழகம் முழுவதும் தாய் என்கிற பெயரில் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றை நடத்தவிருக்கிறார்.

மேலும் தாின் பெருமைகளையும் தியாகத்தையும் குறிப்பிடும் வகையில் ஒரு பாடல் ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். இந்த நிகழ்வில் பேசிய அவர், உங்க எல்லோருக்கும் தெரியும். எனக்கு சின்ன வயசுல பிரெய்ன் டியூமர் இருந்துச்சு. என் தாய் இல்லனா நான் இறந்த இடத்துல புல்லு முளைச்சிருக்கும். 

நாம எல்லா இடத்துலயும் போய் கடவுள தேடிட்டு இருக்கோம். சர்ச்சுக்கு போறோம். நான் தர்காவுக்கு கூட போவேன்.  ஆனா தாய் தான் எனக்கு தெய்வம்னு எனக்கு தெரிய ஆரம்பிச்சது.  கீதை உள்ளிட்டவைகளில் படிச்சிங்கனா அன்பு தான் எல்லாமேனு சொல்றாங்க. என்றார்.

''என் தாய் இல்லனா நான் இறந்த இடத்துல புல்லு முளைச்சிருக்கும்'' - லாரன்ஸ் உருக்கம் வீடியோ