''மணிரத்னம் வெட்கப்பட்டு முத தடவ பார்க்குறேன்'' - பிரபல இயக்குநர் கமெண்ட்
முகப்பு > சினிமா செய்திகள்ராஜ ராஜ சோழனின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு கல்கி எழுதிய வரலாற்று புதினம் 'பொன்னியின் செல்வன்'. மொத்தம் 5 பகுதிகளாக வெளியான இந்த நாவலை மணிரத்னம் தற்போது திரைப்படமாக எடுத்துவருகிறார்.
![Popular director comments, seeing Mani Ratnam blush for the first time | இயக்குநர் மணிரத்னம் குறித்து பிரபல இயக்குநர் கமெண்ட் Popular director comments, seeing Mani Ratnam blush for the first time | இயக்குநர் மணிரத்னம் குறித்து பிரபல இயக்குநர் கமெண்ட்](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/popular-director-comments-seeing-mani-ratnam-blush-for-the-first-time-photos-pictures-stills.jpg)
இந்த படத்தை லைக்கா புரொடக்சன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இந்த படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, சரத்குமார், அஸ்வின் லால் அர்ஜூன் சிதம்பரம் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் இயக்குநர் ராம் கோபால் வர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் மணிரத்னத்துடன் நடிகை அதிதி ராவ் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ''இயக்குநர் மணிரத்னம் வெட்கப்பட்டு முதன்முறையாக பார்க்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
First time I ever saw the super serious Mani Ratnam blushing 😍 pic.twitter.com/P5RpLglPgv
— Ram Gopal Varma (@RGVzoomin) April 7, 2020