www.garudabazaar.com

''முதல்ல அம்மா... நேத்து அப்பா கொரோனாவால இறந்துட்டாங்க'' - பிரபல ஹீரோயின் சொன்ன அதிர்ச்சி தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பலர் கொரோனாவில் இருந்து வெகு விரைவில் மீள்வது மகிழ்ச்சியளித்தாலும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது.

Popular actress shares shocking information about Coronavirus ft Meera Chopra | கொரோனா குறித்து பிரபல நடிகை பகிர்ந்த அதிர்ச்சி தகவல்

இதனிடையே தமிழக அரசு நேற்று (30/08/2020) பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கை வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. அதன் படி நாளை முதல் தமிழகத்தில் மாவட்டத்துக்குள் பேருந்து சேவை துவக்கம், மாநிலங்களுக்குள் பயணிக்க இ பாஸ் ரத்து, திரைப்படப் படப்பிடிப்புகளுக்கு அனுமதி போன்றவை தமிழக அரசு அளித்துள்ள தளர்வுகளில் முக்கியமானவை.

இந்நிலையில் அன்பே ஆருயிரே உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்துள்ள நடிகை நிலா என்கிற மீரா சோப்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவை எழுதியுள்ளார். அதில், என் நண்பர் ஒருவர் கொரோனாவினால் தனது பெற்றோரை இழந்து விட்டார்.

முதலில் அம்மா, நேற்று அப்பா. சில விஷயங்களுக்கு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அது பாதுகாப்பானது அல்ல. தேவை இருந்தால் மட்டுமே வெளியே செல்லுங்கள். மாஸ்க் அணிந்து கொள்ளுங்கள்'' என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Popular actress shares shocking information about Coronavirus ft Meera Chopra | கொரோனா குறித்து பிரபல நடிகை பகிர்ந்த அதிர்ச்சி தகவல்

People looking for online information on Coronavirus, Covid 19, Meera chopra will find this news story useful.