வெளிநாட்டில் படப்பிடிப்பு நடத்தி திரும்பிய ஹீரோவின் படக்குழுவில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஜோர்டன் நாட்டில் நடைபெற்ற 'ஆடுஜீவிதம்' படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு 50 பேர் கொண்ட படக்குழுவினருடன் நடிகர் பிருத்விராஜ் சமீபத்தில் கேரளா திரும்பினார். இதனையடுத்து தானாக முன்வந்து கொரோனா வைரஸ் செய்து கொண்ட அவருக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்று இல்லை என்று அறிவித்தார்.

இந்நிலையில் ரசிகர்களை அதிர்ச்சியளிக்கும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதில், 'ஆடுஜீவிதம்' படப்பிடிப்பில் கலந்துகொண்ட படக்குழுவினரில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாம். அவர் தனது சொந்த ஊரான மலப்புரமில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

மேலும் 58 வயதாகும் அந்த நபர் தற்போது மஞ்சரி மெடிக்கல் கல்லூரிக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த செய்தி ரசிகர்களிடையே  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர் விரைவில் குணமாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

Popular Actor's Movie team member has tested positive for Coronavirus ft Prithviraj's Aadujeevitham | பிரபல நடிகரின் படக்குழுவில் ஒருவருக்கு கொரோனா பாதிப்�

People looking for online information on Aadujeevitham, Coronavirus, Prithviraj will find this news story useful.