'பாபநாசம்' இயக்குநர் ஜீத்து ஜோசஃப் மீண்டும் தமிழில் ஒரு படம் இயக்கவிருக்கிறார். இந்த படத்தில் கார்த்தி, ஜோதிகா, சத்யராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்தை வியாகாம்18 ஸ்டுடியோஸ் மற்றும் பேரலெல் மைன்ட்ஸ் நிறுவனங்கள் தயாரிக்கின்றன. இந்த படத்துக்கு கோவிந்த் வசந்தா இசையமைக்க, ஆர்டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கின்றார். இந்த படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியாகும் என படக்குழு கூறியுள்ளது.
இந்நிலையில் நடிகர் கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், நடிகை நிகிலா விமல் இன்று முதல் எங்களுடன் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். அவரை வரவேற்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.