www.garudabazaar.com

“என்னை விரும்புற ஒரே காரணத்துக்காக எல்லா பழியும் என் மனைவி ஏத்துகிட்டா” - KPY நவீன் உருக்கம்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவி பல முன்னணி கலைஞர்களை உருவாக்கியுள்ளது. குறிப்பாக நகைச்சுவை நிகழ்ச்சிகளான சிரிச்சா போச்சு, கலக்கப்போவது யாரு உள்ளிட்ட விஜய் டிவி நகைச்சுவை நிகழ்ச்சிகள் மூலம் பல முன்னணி கலைஞர்கள் உருவாகி இருக்கின்றனர்.

Krishnakumari about his husband KPY Naveen emotional Interview

Also Read | தமிழகத்தின் புகழ்பெற்ற டச்சுக் கோட்டையில் இந்தியன் 2 ஷூட்டிங்.. வைரலாகும் கமல்ஹாசன் Photos!

சின்னத்திரையிலும் சரி வெள்ளி திரையிலும் சரி இந்த கலைஞர்கள் பிரபலமாகியுள்ளனர்.‌ சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான சிவாங்கி திரைப்படத்தில் தற்போது நடித்திருக்கிறார். விஜய் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருக்கும் மாகாபா சில திரைப்படங்களின் நடிக்கிறார். முன்னதாக லொள்ளு சபா நகைச்சுவை நிகழ்ச்சி மூலம் நடிகர் சந்தானம் திரையுலகத்திற்கு வந்தார். பின்னர் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சிகள் மூலம் சிவகார்த்திகேயன், ரோபோ சங்கர், அமுதவாணன், ராமர், அறந்தாங்கி நிஷா,  வெட்டுக்கிளி பாலா மற்றும் பலர் தற்போது திரையுலகத்தில் பிஸியாக நடித்து வருகின்றனர்.‌

அந்த வகையில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமான நவீன் தம்முடைய நகைச்சுவை மற்றும் மிமிக்ரி திறமையால் திரையுலகில் சிறந்த பின்னணி குரல் கலைஞராக வலம் வருகிறார். அண்மைக் காலங்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பான பாவம் கணேசன் தொடரில் நாயகனாக நடித்த நவீன், பல்வேறு நடிகர்களின் குரலை அப்படியே தத்ரூபமாக பேசக்கூடிய வல்லமை வாய்ந்தவர்.  இந்த நிலையில் இவர் அண்மையில் ஒரு குழந்தைக்கு அப்பாவானார்.

Krishnakumari about his husband KPY Naveen emotional Interview

முன்னதாக சிங்கப்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் மாதவன் வாய்ஸ் பேச சொல்லி நவீனை ஒரு ரசிகையாக கிருஷ்ணகுமாரி கோரிக்கை விடுக்க, அப்போது மாதவன் குரலில் அலைபாயுதே வசனத்தை கிருஷ்ணகுமாரி பெயரை வைத்து பேசி காண்பித்திருக்கிறார் நவீன். அப்போது நவீன் மனதில் எதுவும் இல்லை என்றாலும் கிருஷ்ணகுமாரி நவீனின் இந்த அன்புக்கு பாத்திரமாகி இருக்கிறார். இப்படித்தான் இவர்களின் காதல் கதை தொடங்கியது.

இந்த நிலையில், தங்களின் குழந்தை பிறப்பு மற்றும் மனைவியுடனான காதல் என பல்வேறு விஷயங்களை இவரும் இவருடைய மனைவி கிருஷ்ணகுமாரியும் இணைந்து பிஹைண்ட்வுட்ஸ் தளத்துக்கு பிரத்தியேக பேட்டியாக அளித்திருக்கின்றனர்.

இந்த பேட்டியில் பேசிய நவீனின் மனைவி கிருஷ்ணகுமாரி,“கடைசி நிமிடத்தில் எனக்கு சிசேரியன் என்று தெரிய வந்தது. அப்போது என்னுடைய வலியை இவர் பார்த்தபோது மிகவும் தங்கிக் கொள்ள முடியாமல் தவித்தார்.

Krishnakumari about his husband KPY Naveen emotional Interview

பிறகு எனக்கு குழந்தை பிறந்தது, குழந்தையை அவர்தான் முதன்முதலில் பார்த்தார். நான் பார்க்கவில்லை. என்னிடம் வந்து குழந்தை பிறந்து விட்டதாக குறிப்பிடபோது நான் இன்னும் பார்க்கவில்லையே என்றேன். மருத்துவமனை முழுவதும் குழந்தை பிறந்ததை கொண்டாடி தீர்த்தார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதில் பேசிய நவீன், “என்னை விரும்புகிறாள் என்கிற ஒரே காரணத்துக்காக கிருஷ்ணகுமாரி எல்லா பழியையும், தான் ஏற்றுக் கொண்டார். நான் இன்றும் அவரை ஆச்சரியமாக பார்ப்பேன். எப்படி எல்லாவற்றையும் இப்படி ஏற்றுக்கொண்டு என்னையும் இவ்வளவு அன்பாக பார்த்துக் கொண்டு இருக்க முடிகிறது என்பதுதான் எனக்கு ஆச்சரியமாக இருக்கும். அவருடைய பிரசவ நேரத்தில் திடீரென சிசேரியன் என்று கூறியதும் அவருடைய வலியை நான் கண்முன்னே பார்த்ததும் என்னால் தாங்கிக் கொள்ள முடியாமல் இருந்தேன்” என்று உருக்கமாக பேசியிருக்கிறார்.

Also Read | 'சேது' படத்தை இந்தியில் இயக்கிய சதீஷ் கௌஷிக் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்..!

 

“என்னை விரும்புற ஒரே காரணத்துக்காக எல்லா பழியும் என் மனைவி ஏத்துகிட்டா” - KPY நவீன் உருக்கம்.! வீடியோ

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Krishnakumari about his husband KPY Naveen emotional Interview

People looking for online information on Interview, Kpy naveen, Naveen Krishnakumari will find this news story useful.